NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லண்டனில் கத்திக்குத்து: வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் பலி, குற்றவாளி கைது  
    அடுத்த செய்திக் கட்டுரை
    லண்டனில் கத்திக்குத்து: வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் பலி, குற்றவாளி கைது  

    லண்டனில் கத்திக்குத்து: வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் பலி, குற்றவாளி கைது  

    எழுதியவர் Sindhuja SM
    Apr 30, 2024
    08:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று கிழக்கு லண்டன் புறநகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வாள் ஏந்திய நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்டான் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

    செவ்வாயன்று வடகிழக்கு லண்டனில் ஒரு நபர் வாளால் தாக்கியதால் பலர் காயமடைந்தனர் என்று போலீஸ் படைகள் தெரிவித்தன.

    ஹைனோல்ட் பகுதியில் 36 வயதுடைய நபர் பொதுமக்களையும் இரண்டு அதிகாரிகளையும் தாக்கியதாக பெருநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

    அதில் ஒரு வீடியோ, ஒரு இளைஞன் கையில் வாளுடன் தெருவில் சுற்றித் திரிவதைக் காட்டுகிறது. ஆனால், அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை NewsBytesஆல் சரிபார்க்க முடியவில்லை.

    லண்டன் 

    வேறு சந்தேக நபர்களைத் தேடவில்லை: காவல்துறை 

    ஹைனோல்ட் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் வாகனம் அத்துமீறி நுழைந்ததாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    "இது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு திகிலூட்டும் சம்பவமாக இருந்திருக்க வேண்டும். அப்பகுதி மக்கள் அதிர்ச்சியையும் எச்சரிக்கை உணர்வையும் உணர்ந்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும். அப்பகுதி மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை எங்களால் நிச்சயமாக சொல்ல முடியாது" என்று பெருநகர காவல்துறை துணை உதவி ஆணையர் அடே அடேலெகன் கூறியுள்ளார்.

    இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும் இதனுடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்களைத் தாங்கள் தேடவில்லை என்றும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரலாகும் அந்த சம்பவத்தின் வீடியோ

    #Breaking
    Several injuries were reported in a stabbing in London#London #UK
    A critical incident has been declared with multiple people injured when a car rammed into a house in east London. Several people have been stabbed in Hainault, Redbridge after the car crashed into a… pic.twitter.com/OgjanbOLsR

    — ⚡️🌎 World News 🌐⚡️ (@ferozwala) April 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லண்டன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    லண்டன்

    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு யுகே
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025