NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா அவுட் கொள்கையை கடைபிடிக்கவில்லை; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நிராகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா அவுட் கொள்கையை கடைபிடிக்கவில்லை; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நிராகரிப்பு
    இந்தியா அவுட் கொள்கையை நிராகரித்த முகமது முய்சு

    இந்தியா அவுட் கொள்கையை கடைபிடிக்கவில்லை; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நிராகரிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 28, 2024
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு, இந்தியா அவுட் கொள்கை தொடர்பான கூற்றுக்களை நிராகரித்துள்ளார்.

    பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் டீன் தலைமைத்துவ தொடரில் பேசிய அவர், மாலத்தீவு எந்த ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கும் எதிராக இருந்ததில்லை என்று தெளிவுபடுத்தினார்.

    மாலத்தீவு மண்ணில் வெளிநாட்டு ராணுவ செயல்பாடு குறித்த கவலைகளையும் அவர் குறிப்பிட்டு, நாட்டில் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதை மக்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

    கடந்த ஆண்டு நவம்பரில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாக உள்ளன.

    பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, அங்கிருந்த 90 இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுமாறு முய்சு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டார்.

    ஆன்லைன் பின்னடைவு

    முய்சு சமூக ஊடக சர்ச்சை

    மே 10ஆம் தேதிக்குள், இந்தியா இந்தக் கோரிக்கையைப் பின்பற்றி, ஒரு டோர்னியர் விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களை நிர்வகிப்பதற்காக ராணுவ வீரர்களை வெளியேற்றி சிவிலியன் ஊழியர்களை நியமித்தது.

    இராணுவப் பிரச்சினைகளைச் சமாளிப்பதைத் தவிர, மாலத்தீவின் இளைஞர் அமைச்சகத்தின் துணை அமைச்சர்களால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி சில மோசமான பதிவுகள் வெளியிடப்பட்டதையும் பேசினார்.

    இந்த தகாத கருத்துகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

    "அப்படி யாரும் சொல்லக் கூடாது. அதற்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்தேன்." என்று கூறிய அவர், யாராக இருந்தாலும், அனைவரையும் மதிக்க வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

    இந்தியா வருகை

    அக்டோபரில் இந்தியாவிற்கு வரும் முய்சு

    சர்ச்சைக்குரிய காலத்திற்குப் பிறகு இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்கும் நோக்கில், முய்சு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

    பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய அதிகாரிகளுடனான அவரது சந்திப்புகள் அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

    2023 நவம்பரில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முய்சுவின் முதல் இருதரப்பு பயணமும் இதுவாகும்.

    இதற்கிடையே, இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில், சமீபத்தில் மாலத்தீவின் சில தீவுகளுக்கு தண்ணீர் விநியோகிக்கும் உரிமை உள்ளிட்ட பல ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    ஐநா சபை
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    ஐநா சபை

    எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்: ஐநா கணிப்பு  இந்தியா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது? இந்தியா
    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்

    இந்தியா

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல் குவாட் குழு
    சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்; மத்திய அரசு ஒப்புதல் உயர்நீதிமன்றம்
    தேசிய மகள்கள் 2024: மகள்களை மகிழ்வித்து மகிழுங்கள்  சிறப்பு செய்தி
    'அன்பு மகள்களுக்கு'; தேசிய மகள்கள் தினத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வாழ்த்துப் பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ்

    உலகம்

    பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள் பங்களாதேஷ்
    மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி மியான்மர்
    மீம்ஸ் பகிர்ந்தால் சுற்றுச்சூழல் பாதிக்குமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்  சுற்றுச்சூழல் பாதிப்புகள்
    116 நாடுகளில் பரவியுள்ள Mpox; பாதிப்பு அறிகுறிகளும், சிகிச்சை முறையும் வைரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025