NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும் 

    மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2024
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் சேமிக்கப்படும் என்று மார்ச் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவுகளின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அந்த மூன்று நாடுகளிலும் வாக்களிக்க தலா 150 பேர் மீண்டும் பதிவு செய்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இந்தியாவின் திருவனந்தபுரம்(திருவனந்தபுரம்), இலங்கையின் கொழும்பு மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    வரும் ஏப்ரல் 21 மாலத்தீவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் வாக்களிக்கும் மக்கள், தங்கள் வாக்களிக்கும் நிலையங்களை மாற்றுவதற்கான ஆறு நாள் கால அவகாசம் கடந்த மார்ச் 16ஆம் தேதி முடிவடைந்தது.

    மாலத்தீவு 

    இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்தில் வாக்களிப்பு நடத்தப்படாது

    சுமார் 11,000 மாலத்தீவியர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளை இடமாற்றம் செய்யுமாறு உயர்மட்ட தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனை தொடர்ந்து, வாக்குச் சாவடிகளை மாற்றுவதற்கு விண்ணப்பம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் மக்களிடம் கேட்டு கொண்டது.

    மார்ச் 16ஆம் தேதி வரை இதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. "இலங்கை மற்றும் மலேசியாவில் போதுமான மக்கள் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் திருவனந்தபுரத்தில் 150 பேர் பதிவு செய்திருப்பதால், அங்கு வாக்குப்பெட்டியை அமைக்க முடிவு செய்துள்ளோம்" என்று மாலத்தீவின் செயலாளர் நாயகம் ஹசன் சகாரியா கூறியுள்ளார்.

    கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மீண்டும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் குறைவாகவே இருக்கிறது என்றும் சகாரியா குறிப்பிட்டார்.

    இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்தில் வாக்களிப்பு நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உலகம்
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இந்தியா

    25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு  மத்திய அரசு
    ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது  ஜார்கண்ட்
    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு  கூகுள்
    மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு  கூகுள்

    உலகம்

    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு  கனடா
    பாரிஸ் நகரத்தில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 3 பேர் காயம்  பிரான்ஸ்
    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது  இந்தியா
    நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு  மாலத்தீவு

    உலக செய்திகள்

    பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம் பாகிஸ்தான்
    சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா உலகம்
    ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்  இஸ்ரேல்
    யூடியூப் முன்னாள் CEOவின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்பு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025