NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு

    மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு

    எழுதியவர் Srinath r
    Dec 29, 2023
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    ஜனவரி 2021ல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி, மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்துள்ளது.

    மைனே மாநிலச் செயலர் ஷென்னா பெல்லோஸ் தனது தீர்ப்பில், ஜனவரி 6, 2021 நிகழ்வுகள் "வெளியேறும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலும், அவரின் அறிவுக்கு உட்பட்டும் மற்றும் ஆதரவுடன் நிகழ்ந்தன" என கூறியுள்ளார்.

    அமெரிக்க அரசியலமைப்பு, அதன் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ளாது என தெரிவித்துள்ளவர், மேலும், மைனே சட்டமும் தான் இதற்கு எதிராக செயல்பட வேண்டியதை உணர்த்துவதாக, தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

    கிளர்ச்சியாளர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற, அரசியலமைப்பு விதியின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    2nd card

    ட்ரம்பை தகுதி நீக்கம் செய்த கொலராடோ மாகாணம்

    முன்னதாக, இந்த மாதத்தின் மத்தியில் மற்றொரு அமெரிக்க மாகாணமான கொலராடோவும், முன்னாள் அதிபர் ட்ரம்பின் நாடாளுமன்ற கலவரத்துடனான தொடர்புகளுக்காக, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான முதன்மை வாக்கெடுப்பில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த ஏழு நீதிபதிகள் கொண்ட கொலராடோ மாகாண நீதிமன்றம், 4-3 என்ற எண்ணிக்கையில் ட்ரம்புக்கு எதிரான இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

    இருப்பினும் இந்த தீர்ப்புகளுக்கு எதிராக ட்ரம்ப், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    முன்னாள் அதிபர் எதற்காக தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்?

    கடந்த, 2016-20 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப, 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.

    இந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அவர் தூண்டியதாக சொல்லப்படும் கிளர்ச்சியால், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அவரின் ஆதரவாளர்கள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இது தொடர்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது பல்வேறு மாகாண நீதிமன்றங்களில், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்கா
    குடியரசு தலைவர்
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா

    அமெரிக்கா

    ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம் ஹாலிவுட்
    கியேவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 53 பேர் காயம், குழந்தைகள் மருத்துவமனை சேதம் உக்ரைன்

    குடியரசு தலைவர்

    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார் சீனா
    இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு  இந்தியா
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா

    நாடாளுமன்றம்

    மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது திரிணாமுல் காங்கிரஸ்
    கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் திரிணாமுல் காங்கிரஸ்
    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரிணாமுல் காங்கிரஸ்
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025