NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்

    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2024
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    குவைத்தின் தெற்கு அஹ்மதி மாகாணத்தில் உள்ள மங்காப் நகரில் இருக்கும் கட்டிடத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

    அந்தக் கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இறந்தவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற போது கட்டிடத்தில் சிக்கிய பலர் பலத்த காயம் அடைந்தனர்.

    குவைத்

    உயிரிந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

    இந்த தீ விபத்தில் குறைந்தது 30 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அதான் மருத்துவமனை, அல்-ஃபர்வானியா மருத்துவமனை, அல்-அமிரி மருத்துவமனை, முபாரக் மருத்துவமனை மற்றும் ஜாபர் அல்-அஹமது மருத்துவமனையில் தீயணைப்புப் படை மற்றும் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.

    இதற்கிடையில், குவைத்தின் தெற்கு மங்காப் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 35 பேர் பலியாகியுள்ளதாக அரசு நடத்தும் குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தில் 41 பேர் கொல்லப்பட்டதாக குவைத் துணைப் பிரதமர் கூறி இருக்கிறார்.

    இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து மலையாளிகள் உள்ளனர் என்று மனோரமா ஊடகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    கேரளா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    உலகம்

    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா  இந்தியா
    சோடியம் அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை தொடங்கியது சீனா சீனா
    லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு  லண்டன்
    பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம்  அமெரிக்கா

    கேரளா

    பரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி  கொரோனா
    கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு கோவிட்
    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தமிழ்நாடு
    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி  கைது

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை மலையாள திரையுலகம்
    சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை கர்நாடகா
    பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு பிரதமர் மோடி
    தேர்தல் 2024: திமுக சார்பில் களமிறங்கும் 11 புதுமுகங்கள் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025