NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து
    இந்த நிகழ்விற்கு வெளியிடப்பட்ட விளம்பர சுவரொட்டிகளில் ஆயுதத்தின் படங்களுடன் பள்ளியின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

    சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து

    எழுதியவர் Sindhuja SM
    Sep 04, 2023
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கனேடிய அதிகாரிகள் பொதுப் பள்ளியில் 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நடத்த அனுமதிக்க மறுத்ததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் இருக்கும் தமனாவிஸ் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 10ஆம் தேதி 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நடத்த திட்டமிடப்பட்டது.

    ஆனால், இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் சர்ரே மாவட்ட பள்ளி வாரியத்தின் செய்தித் தொடர்பாளர், "எங்கள் வாடகை ஒப்பந்தத்தை மீறியதால் எங்கள் பள்ளியில் நடக்க இருந்த சமூக நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்விற்கு வெளியிடப்பட்ட விளம்பர சுவரொட்டிகளில் ஆயுதத்தின் படங்களுடன் பள்ளியின் படங்களும் இடம்பெற்றிருந்தன. இதனாலேயே இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    டக்ஜ்ன்

    பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களின் போஸ்டர்கள் 

    காலிஸ்தான் வாக்கெடுப்புக்கான சுவரொட்டியில் AK-47 இயந்திர துப்பாக்கி மற்றும் கிர்பான் ஆகிய இரண்டும் இடம்பெற்றிருந்தன.

    இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    "பிரச்சினையைத் தீர்க்க பலமுறை முயற்சித்த போதிலும், இந்த படங்களை அகற்ற அவர்கள் தவறிவிட்டனர்" என்று சர்ரே மாவட்ட பள்ளி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஜூன் 23, 1985இல் 329 உயிர்களைக் கொன்ற பயங்கரவாத குண்டுவெடிப்பு ஏர் இந்தியா விமானத்தின் மீது நடத்தப்பட்டது.

    இந்த பயங்கரவாத குடுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தல்விந்தர் சிங் பர்மார் என்பவரின் போஸ்டர்களும் சர்ரே மாவட்ட பள்ளியில் ஒட்டப்பட்டிருந்தன.

    இதனால் கடந்த வாரம், கனடாவில் வாழும் இந்தியர்கள் 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நிகழ்ச்சிக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    உலகம்
    உலக செய்திகள்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் இந்தியா
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலக செய்திகள்

    உலகம்

    அடிப்படை வசதிகள் கூட இல்லாத தனிமைச் சிறையில் முன்னாள் பாக்., பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான்
    உலகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, எச்சரிக்கும் புதிய தகவலறிக்கை பூமி
    லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம்  இந்தியா
    மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள 5 இடங்கள் - ஓர் பார்வை  சுற்றுலா

    உலக செய்திகள்

    இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது? உலகம்
    அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு  அமெரிக்கா
    'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்
    ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம்  ஆப்கானிஸ்தான்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025