NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி
    நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி

    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 27, 2023
    04:25 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து கனடாவில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை ஆய்வு செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர், எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    நியூயார்க்கில் நடந்த "வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் விவாதத்தில்" பேசிய அவர், கனடாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டதாக செப்டம்பர்-18 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி இருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக இருநாட்டு உறவும் அதளபாதாளத்தில் வீழ்ந்தது.

    தொடர்ந்து, கனேடியர்களுக்கான விசா சேவைகளை புது தில்லி நிறுத்தி வைத்தது.

    card 2

    உறுதியான ஆதாரங்களை கேட்கும் இந்தியா 

    இதனை தொடர்ந்து ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்ற போது தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இந்தியாவின் "கொள்கை" அல்ல என்று இந்திய அரசாங்கம், கனேடிய அரசாங்கத்திடம் தெரிவித்ததாக கூறிய ஜெய்சங்கர், நிஜ்ஜாரின் மரணம் குறித்து கனடாவிடம் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

    மேலும், ஜெய்சங்கர், இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல், இந்திய தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கவலைகளை எழுப்பினார். அரசியல் காரணங்களுக்காக இந்த சம்பவங்கள் "பரவலாக அனுமதிக்கப்படுகின்றன" என்று கூறினார்.

    மறுபுறம் கனடாவோ, நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளின் பங்கு பற்றிய ஆதாரங்களை கனடா பல வாரங்களுக்கு முன்பு இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடா
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    கனடா

    கனடா மக்களுக்கு செய்திப் பதிவு மற்றும் பகிர்வுக்கான அணுகலைத் தடுத்திருக்கும் மெட்டா மெட்டா
    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  ஜஸ்டின் ட்ரூடோ
    கனடாவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற சாதனை படைக்கும் டேனியல் மெக்கஹே கிரிக்கெட்

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025