NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் 
    காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக, மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், ஜோடான் உள்ளிட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர்.

    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் 

    எழுதியவர் Srinath r
    Oct 14, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    பல தசாப்தங்களாக நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாசின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின் போராக மாறியது.

    இதில் இரு தரப்பிலும் தற்போது வரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும், இந்த பூமியை விட்டு ஹமாஸ் ஆய்தக்குழு துடைத்தெரியப்படும் என சூளுரைத்திருந்த இஸ்ரேல், காஸா மீது தரைவழித் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

    மேலும் இஸ்ரேல், காஸா மக்களுக்கு 24 மணி நேர காலக்கெடு விதித்து, அவர்களை வடக்கு காஸாவில் இருந்து தெற்கு நோக்கி வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மத்திய கிழக்கு மக்கள்

    காஸா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், அங்கு சோதனைகளையும் நடத்தி வருகிறது.

    காணாமல் போனவர்களையும் கண்டுபிடிப்பதற்காகவும், ஆயுதங்கள் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளை கண்டறிவதற்காகவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம், இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுத குழுவினர், 150க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டினரை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர் என இஸ்ரேல் கூறியிருந்தது.

    கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வரும் இஸ்ரேலின் பதில் தாக்குதலில், 1,900 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 600 பேர் குழந்தைகளாவர்.

    காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    ஈரான், ஈராக், ஜோடான் உள்ளிட்ட நாடுகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்கள் போராடிவருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஈரான்
    ஈராக்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரேல்

    இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.680 உயர்வு  சென்னை
    ஜெர்மனியப் பெண்ணின் உடலை மானபங்கப்படுத்திய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் வைரல் செய்தி
    ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் தமிழ்நாடு
    ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்? உலகம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா

    ஈராக்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025