NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான்
    இதுவரை, இந்த வழக்குகளில் யாரும் கைது செய்யப்படவில்லை

    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2023
    01:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் நாடுமுழுவதும் மாபெரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில், பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க மாணவிகளுக்கு விஷவாயு கொடுத்ததாக ஈரான் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

    நேற்று(பிப் 26) ஈரானிய துணை அமைச்சர் ஒருவர், "பெண்களுக்கான கல்வியை நிறுத்தும் நோக்கத்துடன் புனித நகரமான கோமில் பள்ளி மாணவிகளுக்கு சிலர் விஷம் கொடுக்கிறார்கள்" என்று கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.

    தகவல்களின்படி, துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி, விஷம் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

    சமீபத்தில், ஈரானிய பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட மாபெரும் நோய் பரவல் இதனாலேயே ஏற்பட்டது என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ரசாயனங்களை பயன்படுத்தி சிலர் வேண்டுமென்றே விஷம் வைத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    ஈரான்

    பள்ளியை மொத்தமாக மூடும் நோக்கத்தில் செய்யப்பட்டது: பனாஹி

    கடந்த ஆண்டு நவம்பரில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோமில் பல விஷவாயு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட பலருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.

    "கோம் பள்ளிகளில் பல மாணவிகள் விஷவாயுவால் தாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பள்ளியை மொத்தமாக மூடும் நோக்கத்தில் சிலர் இதை செய்தனர் என்பது தெரியவந்தது." என்று பனாஹி கூறியதாக IRNA மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 14 அன்று, நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நகரின் கவர்னரேட்டிற்கு வெளியே கூடி இதை எதிர்த்து போராடி இருக்கின்றனர்.

    இதுவரை, இந்த வழக்குகளில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று AFP தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    உலகம்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா

    உலகம்

    இந்தோனேசியாவில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை ஆஸ்திரேலியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025