NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
    இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு pc: pakistan today

    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 10, 2025
    06:41 am

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது.

    பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி அதிகாலை 4 மணியளவில் இஸ்லாமாபாத்தில் அவசரமாக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், பாகிஸ்தான் விமானப்படையின் நூர் கான் (சக்லாலா, ராவல்பிண்டி), முரித் (சக்வால்) மற்றும் ரஃபிகி (ஜாங் மாவட்டத்தில் ஷோர்கோட்) விமானப்படை தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம், தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியாவின் சில ஏவுகணைகள் பாகிஸ்தானின் உள்ள பஞ்சாபையும் தாக்கியதாகவும், சில ஆப்கானிஸ்தானுக்குள் சென்றதாகவும் ஷெரீப் கூறினார்.

    சேதம்

    இந்தியாவின் ஏவுகணை தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை: பாகிஸ்தான்

    "ஆனால் விமானப்படையின் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளன," என்று பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

    இந்தியா தனது ஜெட் விமானங்கள் மூலம் வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று அவர் கூறினார்.

    பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பால் பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

    "இந்தியா இப்பிராந்தியத்தை கொடிய போருக்குத் தள்ளும் ஒரு மோசமான செயல் இது, இந்த ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இந்தியா நமது பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும்" என்று சவுத்ரி கூறினார். எனினும், அவர் செய்தியாளர்களின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சந்திப்பை உடனே நிறுத்திக்கொண்டார்.

    வான்வெளி

    வான்வெளியை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

    சிவில் விமானங்களை கேடயமாக பயன்படுத்துகிறது என நேற்று இந்தியா கூறியதையடுத்து வான்வெளியை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

    இது சார்ந்த அறிவிப்பை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) வெளியிட்டது.

    அதன்படி பாகிஸ்தானின் வான்வெளி அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அனைத்து வகையான விமானப் போக்குவரத்திற்கும் மூடப்பட்டுள்ளதாகக் கூறியது.

    PAA மதியம் 12 மணிக்கு புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா
    இந்தியா vs பாகிஸ்தான்
    ஏவுகணை தாக்குதல்

    சமீபத்திய

    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்

    பாகிஸ்தான்

    ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்: விமான சேவைகள் பாதிப்பு - மும்பை vs பஞ்சாப் லீக் போட்டி இடமாற்றம் ஐபிஎல் 2025
    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது பாகிஸ்தான் ராணுவம்
    லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான் விமான நிலையம்
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது இந்திய ராணுவம்

    இந்தியா

    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு ஆபரேஷன் சிந்தூர்
    Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப் பாகிஸ்தான்
    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது தங்க விலை
    இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான் கர்தார்பூர் வழித்தடம்

    இந்தியா vs பாகிஸ்தான்

    Ind vs Pak ஆசிய கோப்பை: 357 என பாக்.,கிற்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா  ஆசிய கோப்பை
    Ind vs Pak: 47வது ஒருநாள் சதமடித்து விராட் கோலி சாதனை விராட் கோலி
    ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி ஆசிய கோப்பை
    வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? ஷுப்மன் கில்

    ஏவுகணை தாக்குதல்

    பாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா இந்தியா
     S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது? இந்தியா
    பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு  ஜம்மு காஷ்மீர்
    3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025