LOADING...
டித்வா பேரிடரில் சிக்கிய இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய இந்தியா
இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய இந்தியா

டித்வா பேரிடரில் சிக்கிய இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய இந்தியா

எழுதியவர் Venkatalakshmi V
Dec 23, 2025
03:57 pm

செய்தி முன்னோட்டம்

கடுமையான புயல் மற்றும் தொடர் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்துள்ள அண்டை நாடான இலங்கைக்கு, இந்தியா 450 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹3,700 கோடி) நிதியுதவியை அவசரக்கால உதவியாக அறிவித்துள்ளது. இலங்கையில் சமீபத்தில் வீசிய கோர புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையால் அந்நாட்டின் பல மாகாணங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு, இந்த இயற்கைச் சீற்றம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உதவி

இந்தியா உடனடியாக உதவி

இந்நிலையில், இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) கொள்கையின் அடிப்படையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு இந்த பிரம்மாண்ட நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்த நிதி உதவி மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள் உடனடியாக வழங்கப்படும். சேதமடைந்த மின்சாரம் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும், வீடுகளை இழந்தவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிதியுதவி மட்டுமின்றி, தேவைப்பட்டால் கூடுதல் மீட்புப் படைகளை அனுப்பவும் இந்தியா தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement