NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி 
    இந்த விருந்தில் இந்திய பாரம்பரிய உணவுகளும் சிறுதானியங்களும் வழங்கப்பட்டன.

    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2023
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று(மே 22) பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் மூன்றாவது இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு(FIPIC) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்தார்.

    இந்த விருந்தில் இந்திய பாரம்பரிய உணவுகளும் சிறுதானியங்களும் வழங்கப்பட்டன.

    குஜராத்தின் காந்த்வி, மலாய் கோஃப்தா, வெஜிடபிள் கோலாபுரி, தால் பஞ்சமெல் போன்ற இந்திய உணவுகள் இதில் அடங்கும்.

    2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு மனிதகுலம் அறிந்த பழமையான உணவுகள் வழங்கப்படுவதை இந்திய பிரதிநிதிகள் உறுதி செய்துள்ளனர்.

    ராஜஸ்தானிய ராகி கட்டா கறி மற்றும் சிறுதானிய பிரியாணி ஆகியவையும் இந்த விருந்தின் மெனுவில் சேர்க்கப்பட்டிருந்தது.

    details

    மசாலா டீ, கிரீன் டீ, புதினா டீ மற்றும் PNG காபி ஆகிய பானங்களும் வழங்கப்பட்டன

    FIPIC உச்சி மாநாட்டின் விருந்தில் சிறுதானியங்கள் சேர்க்கப்பட்டது, சிறுதானிய உணவுகளுக்கு இந்தியா கொடுக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

    2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐநா பொதுச் சபை, இந்திய அரசின் உத்தரவின் பேரில் 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது.

    FIPIC விருந்தினர்களுக்கு மசாலா சாஸ்(கிரீமி தயிர் மற்றும் இந்திய மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட கோடைகால பானம்) என்பதும் வழங்கப்பட்டது.

    விருந்தின் போது, பான் குல்பி மற்றும் ரப்டி இனிப்புகளாக பரிமாறப்பட்டன.

    பப்புவா நியூ கினியாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமரான பிரதமர் மோடி, இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின்(FIPIC) மூன்றாவது உச்சிமாநாட்டை பப்புவா நியூ கினியாவின் பிரதமருடன் இணைந்து இன்று நடத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  காவல்துறை
    கர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கர்நாடகா
    சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி டெல்லி
    நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம்  ஏர் இந்தியா

    உலகம்

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா
    எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது வானிலை எச்சரிக்கை
    தங்கள் ஊரில் குடியேற, அரசாங்கமே பணம் தரும் விசித்திர நாடுகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சுற்றுலா
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா

    உலக செய்திகள்

    பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது  லண்டன்
    ஜெருசலேம் தேவாலயத்தில் உள்ள 'அசையா ஏணி'யின் மர்மம் விலகியது வைரல் செய்தி
    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி உலகம்
    புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு ரஷ்யா

    நரேந்திர மோடி

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025