NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்
    உலகம்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    August 29, 2023 | 02:26 pm 0 நிமிட வாசிப்பு
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்
    இந்த மனு மீதான தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா வழக்கில் இன்று(ஆகஸ்ட் 29) ஜாமீன் பெற்றார். இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியது. மேலும், இந்த மனு மீதான தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்று இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கிய இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தனர். தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு

    இதனையடுத்து, பிடிஐ தலைவர் ஜமான் பார்க் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருத்தது. கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குள் தனது தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்தார். ஆகஸ்ட் 22ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முறையான விசாரணையைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தனது வாதத்தை முடித்த இம்ரான் கானின் வழக்கறிஞர் லத்தீப் கோசா, இந்த தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டது என்றும் இதில் குறைபாடுகள் நிறைய இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது இம்ரான் கானின் தண்டனை இடை நிறுத்தப்பட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்

    பாகிஸ்தான்

    தேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி நீரஜ் சோப்ரா
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி உலக சாம்பியன்ஷிப்
    இஸ்ரோவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சந்திராயன்-3 திட்டத்திற்கு  பாராட்டு இந்தியா
    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி  ஆப்கானிஸ்தான்

    இம்ரான் கான்

    அடிப்படை வசதிகள் கூட இல்லாத தனிமைச் சிறையில் முன்னாள் பாக்., பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான்
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை  பாகிஸ்தான்
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  பாகிஸ்தான்
    இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023