NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு
    எரிபொருள் இல்லாததால் இன்குபேட்டர்கள் முடங்கிய நிலையில், அல்-ஷிஃபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ள குறைமாத குழந்தைகள். படம்-ராய்டர்ஸ்

    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

    எழுதியவர் Srinath r
    Nov 13, 2023
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பிய எரிபொருளை, மருத்துவமனை ஊழியர்கள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது.

    "நேற்று இரவு மருத்துவமனைகளின் ஜெனரேட்டர்கள் மற்றும் இன்குபேட்டர்களை இயக்க போதுமான எரிபொருளை நாங்கள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வழங்கினோம்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

    ஆனால் அந்த எரிபொருளை, மருத்துவமனை ஊழியர்கள் பெற வேண்டாம் என ஹமாஸ் அழுத்தம் வழங்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இது குறித்த வீடியோவையும், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தவில்லை.

    எரிபொருள் பற்றாக்குறையால் 3 குழந்தைகளும், அறுவை சிகிச்சை செய்ய மின்சாரம் இல்லாததால் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக, ஹமாசால் நடத்தப்படும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    2nd card

    குழந்தைகள் மீட்கப்படுவதில் குறுக்கிடும் ஹமாஸ்

    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் மீட்கப்படுவதில் ஹமாஸ் குறிப்பிடுவதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பேசிய அதன் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட், "நாங்கள் மூன்றாம் தரப்பினர் மூலமாக கூட, ஒரு தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். சோகமாக, அல்-ஷிஃபா மருத்துவமனைக்கும், எரிபொருளுக்கும் இடையே ஹமாஸ் குறிக்கிடுகிறது" என தெரிவித்தார்.

    நேற்று 300 லிட்டர் எரிபொருளை, மருத்துவமனைக்கு வழங்க அதன் அருகில் கொண்டு சென்றதாகவும், ஆனால் மருத்துவமனையால் அது பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் ரிச்சர்ட் ஹெக்ட் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், 300 லிட்டர் எரிபொருள் எவ்வளவு காலத்திற்கு மருத்துவமனைக்கு பயன்படும் என்பது தனக்குத் தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

    முன்னதாக, காசாவில் உள்ள குழந்தைகளை மீட்டு சிகிச்சை வழங்க இஸ்ரேல் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    இஸ்ரேல் வழங்கும் எரிபொருள் அரை மணி நேரம் மட்டுமே நீடிக்கும்- மருத்துவர்

    இஸ்ரேல் வழங்கும் 300 லிட்டர் எரிபொருள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு, அரை மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கும் என அம்மருத்துவமனையின் மருத்துவர் பிபிசி இடம் தெரிவித்துள்ளார்.

    அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 24,000 லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என, அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர் மர்வான் அபு சாதா கூறியுள்ளார்.

    மேலும், மருத்துவமனையில் உள்ள ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டாலும் 9,000 எரிபொருள் வரை செலவாகும்.

    மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால், கடந்த இரண்டு நாட்களில் 45 நபர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

    அடையாளம் தெரியாத பிணங்களை புதைப்பதற்காக, 4 பெரிய குழிகளை மருத்துவமனை ஊழியர்கள் வெட்டியுள்ளனர். இன்னும், 100 பிணங்கள் மருத்துவமனையில் புதைப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    4th card

    அல்-ஷிஃபாவில் 2,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்

    காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், அல்-ஷிஃபா மருத்துவமனையில் 2,300 நபர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    மருத்துவமனையில் 600-650 நோயாளிகளும், 200-500 சுகாதாரப் பணியாளர்களும், சுமார் 1,500 மக்களும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

    இவர்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் போரில், 11,180 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 4,609 குழந்தைகளும், 3,100 பெண்களும் அடங்கும்.

    மேலும், 28,200 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    போர் தொடங்கியதற்கு பின்னர், காசாவிற்கு செல்லும் மின்சாரம், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் துண்டித்தது.

    காசாவிற்கு எரிபொருள் வழங்கப்பட்டால், ஹமாஸ் அதை தவறாக பயன்படுத்த கூடும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    அல்-ஷிஃபாவில் இருப்பவர்கள் குறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள்

    Ministry of Health update about the dire situation at Al-Shifa Hospital - received on 12 Nov:
    🔹600-650 inpatients, 200-500 health workers and approximately 1500 internally displaced people still inside the hospital.
    🔹Lack of power, water and food, putting lives at immediate… pic.twitter.com/3MQfKdpqlY

    — WHO in occupied Palestinian territory (@WHOoPt) November 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    ஹமாஸ்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    ஹமாஸ்

    மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர் இஸ்ரேல்
    காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல் துருக்கி
    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்

    இஸ்ரேல்

    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா ஹமாஸ்
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025