NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்? 
    ஹூதிகளால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்? 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 20, 2023
    02:51 pm

    செய்தி முன்னோட்டம்

    செங்கடலில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு கடத்தப்பட்டது.

    இந்த கடத்தல் சம்பவம் பின்னணியில், ஈரானின் ஆதரவு பெற்ற, ஏமன் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் ஹூதிக்கள் கடத்தியுள்ளனர் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், இந்தச் சம்பவத்தை "ஈரானிய பயங்கரவாதச் செயல்" எனக் கூறியது.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது மற்றொரு ஈரானிய பயங்கரவாதச் செயலாகும். இது சுதந்திர உலகின் குடிமக்களுக்கு எதிரான ஈரானின் போர்க்குணத்தை பிரதிபலிக்கிறது" என குற்றம் சுமத்தியுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, ஹூதிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

    அதில் அவர்கள் கப்பலை கடத்தியத்தை ஒப்புக்கொண்டது மட்டுமின்றி, அதில் இருந்தவர்களை "இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் மதிப்புகளின்படி" நடத்துவதாகவும் கூறினர்.

    card 2

    ஏமனின் ஹூதி போராளிகள் யார்?

    தெஹ்ரானுடன் நட்பு கொண்டாடும் ஹூதிகள், காசா பகுதியில் போரிடும் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அதரவாக, இஸ்ரேல் மீது நீண்ட தூர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    எனினும் அவர்களின் ஏவுகணைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை தோல்வியடைந்தன. அதனால் தற்போது கப்பல் கடத்தலில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    1990 களின் பிற்பகுதியில், ஹூதி இயக்கம் தொடங்கியது. இந்த கிளர்ச்சியாளர்கள் குழு, ஒரு காலத்தில் ஏமனை ஆண்ட ஷியா இஸ்லாத்தின் ஜெய்டி பிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.

    card 3

    ஹமாஸிற்கு ஆதரவு கரம் நீட்டும் ஹூதி 

    ஜெய்டி பிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்டபோதிலும், காலப்போக்கில் தங்கள் செல்வத்தை இழந்து வறுமையினால் ஓரங்கட்டப்பட்டார்கள்.

    அதன் தொடர்ச்சியாக ஹூதிகள், ஏமன் அரசாங்கத்துடன் பலமுறை மோதினர்.

    மேலும் இது நீண்டகாலமாக தொடர்ந்துவரும் மோதல் எனவும் கூறப்படுகிறது.

    தற்சமயம், ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து, இந்த கிளர்ச்சிக் குழு, பாலஸ்தீனத்துடன் நட்பு பாராட்டி, இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    card 4

    இந்தியா செல்லும் சரக்கு கப்பலை ஹவுதிகள் கடத்தியது ஏன்?

    இந்தியாவுக்குச் செல்லும் சரக்குக் கப்பல் ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமானது மற்றும் ஜப்பானியர்களால் இயக்கப்படுகிறது.

    ஆனால் ஹூதிகள், அந்தக் கப்பல் இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்று கூறுகின்றனர்.

    கடத்தப்பட்ட இந்த சரக்கு கப்பல் இப்போது ஏமன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    செய்திகளின் படி, கப்பலில் இஸ்ரேலியர்கள் யாரும் இல்லை. அதிலுள்ள 25 பணியாளர்களும், உக்ரைன், பல்கேரியன், பிலிப்பினோ மற்றும் மெக்சிகன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

    இஸ்ரேலுடனான தொடர்பு காரணமாக கப்பலை கடத்தியதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.

    card 5

    ஹெலிகாப்டரில் பறந்து வந்து நடந்தேறிய கடத்தல் சம்பவம் 

    இந்த சம்பவம் பற்றி விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கையில், "உள்ளூர் நேரப்படி, மதியம் 1-மணியளவில், ஒரு ஹெலிகாப்டர், ஜப்பானியர்களுக்குச் சொந்தமான கேலக்ஸி லீடர் கப்பலின் மேல் பறந்து வந்தது. அதனுள்ளிருந்து, ஆயுதம் ஏந்திய நபர்கள், கப்பல் தளத்திற்குச் சென்றனர். அதன் பின்னர் மாலுமிகளை மிரட்டி, கப்பலை கடத்தியுள்ளனர்" எனத்தெரிவித்தார்கள்.

    நவம்பர் 16 அன்று, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கட்டுமான குழு, பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக யேமன் மற்றும் ஜிபூட்டிக்கு இடையே உள்ள பாப் எல்-மண்டேப் வழியிலும், செங்கடலில் உள்ள வழித்தடங்களில் பயணிக்கும் அனைத்து கடற்படையினருக்கும், ஹூதிகளின் பெயரை குறிப்பிடாமல் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.

    அதன்படி, ஏமன் கடற்பரப்பிலிருந்து கப்பல்கள் முடிந்தவரை தொலைவில் இருக்குமாறும், முடிந்தவரை இரவில் பயணம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடத்தல்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    இஸ்ரேல்

    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹101.50 உயர்வு சென்னை
    ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே வெளியேற்றம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கு சமமானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேலி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றதாக ஒப்புக்கொண்ட ஹமாஸ் வீரர் இஸ்ரேல்
    அக்டோபர் 7 தாக்குதல் போல மற்றொரு தாக்குதலை நடத்தவும், இஸ்ரேலை அழிக்கவும் ஹமாஸ் சபதம் ஹமாஸ்
    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை ஹமாஸ்
    ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025