NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது
    82 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட ஹிட்லரின் பென்சில் விற்பனைக்கு வர இருக்கிறது

    ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது

    எழுதியவர் Sindhuja SM
    Jun 04, 2023
    08:00 am

    செய்தி முன்னோட்டம்

    உலகின் மிகப்பெரும் சர்வாதிகாரியாக கருதப்படும் ஹிட்லரின் 52வது பிறந்த நாளுக்கு அவரது காதலி பரிசாக கொடுத்த ஒரு பென்சில் ஏலத்திற்கு வர இருக்கிறது.

    1941ஆம் ஆண்டு, அதாவது ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது நீண்டநாள் காதலி ஈவா-பிரவுன் அவருக்கு ஒரு பென்சிலை பரிசளித்தார்.

    ஜெர்மன் சர்வாதிகாரிக்கு சொந்தமான இந்த பென்சில், வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் விற்கப்பட உள்ளது.

    ஹிட்லருக்கு சொந்தமானது என்று சொன்னாலே அதற்கு பெரும் மவுசு இருக்கும். இந்நிலையில், அந்த பென்சிலில் பொறிக்கப்பட்டுள்ள விவரங்கள் அதை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது.

    8.5 செமீ நீளம் கொண்ட இந்த பென்சில், ஹிட்லரது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்.

    அதில் ஈவாவின் பெயருடன் "AH"(அடால்ஃப்-ஹிட்லர்) என்ற இனிஷியலும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    details

    82 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட ஹிட்லரின் பென்சில் 

    இந்த வரலாற்று சிறப்புமிக்க பென்சில் தற்போது அதன் உரிமையாளரிடம் உள்ளது. அவர் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஏலத்தின் போது அதை வாங்கினார்.

    இந்த பென்சில் சுமார் 80,000 பவுண்டுகளுக்கு(அதாவது 82 லட்ச ரூபாய்) விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈவா பிரவுன் ஒரு ஜெர்மன் புகைப்படக் கலைஞர் ஆவார். அவர் 1929 இல் ஹிட்லரை முதன்முதலில் சந்தித்தார்.

    ஹிட்லரை சந்திப்பதற்கு முன் அவர் ஒரு மாடலாகவும், ஹிட்லரின் தனிப்பட்ட புகைப்படக் கலைஞரான ஹென்ரிச் ஹாஃப்மேனின் உதவியாளராகவும் இருந்தார்.

    அவர்கள் இருவருக்கும் இடையே 23 வயது வித்தியாசம் இருந்ததாக கூறப்படுகிறது.

    1945இல் ஒரு சிறிய பதுங்கு குழியில் அவர்கள் இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025

    உலகம்

    மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது!  உலக செய்திகள்
    கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்! இங்கிலாந்து
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா
    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா

    உலக செய்திகள்

    கேன்ஸ் 2023: உலகத் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படங்கள் டிரெண்டிங்
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா
    இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை  சீனா
    அடுத்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத அளவு வெப்பம் அதிகரிக்கும்: ஐநா  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025