NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு 
    அப்படி ஒரு வழிபாட்டை தான் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த இந்துக்கள் பின்பற்றி வருகின்றனர்.

    இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 11, 2023
    07:15 am

    செய்தி முன்னோட்டம்

    தீ மிதிப்பது, அலகு குத்துவது போன்ற பல வினோத வழிபாடுகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டாலும், எரிமலைக்குள் ஆடு மாடுகளை தூக்கி வீசும் வழிபாடுகளை இதுவரை கேட்டிருக்கிறீர்களா?

    அப்படி ஒரு வழிபாட்டை தான் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த இந்துக்கள் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த திங்கள்கிழமை யத்ன்யா கசடா என்ற திருவிழாவின் ஒரு பகுதியாக ஆடு, கோழி, காய்கறி மற்றும் உணவு வகைகள் நெய்வேத்தியமாக ப்ரோமோ மலையில் இருக்கும் எரிமலை குழிக்குள் வீசப்பட்டது.

    ஒவ்வொரு வருடமும், அந்த பகுதியை சேர்ந்த டெங்கர் பழங்குடியினர் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று வேண்டி கொண்டு, இறைவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பதை இந்த மலைக்கு மேல் நின்று எரிமலைக்குள் வீசுகின்றனர்.

    details

    சிலர் முட்டைகோஸ், கேரட் போன்ற காய்கறிகளையும் எரிமலைக்குள் வீசி எறிந்தனர்

    இப்படி செய்தால் தங்களது பிரார்த்தனை நிறைவேறும் என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை.

    இந்த வருட திருவிழாவின் போது, டெங்கர் பழங்குடியினரைச் சேராத சில கிராமவாசிகள், ஆடு மாடுகள் குழிக்குள் விழுந்து உயிரிழப்பதை தடுப்பதற்கு வலைகளை எடுத்து சென்று அவைகளை காப்பாற்ற முயன்றனர்.

    சிலர் முட்டைகோஸ், கேரட் போன்ற காய்கறிகளையும் எரிமலைக்குள் வீசி எறிந்தனர்.

    "எங்களிடம் வீட்டில் நிறைய பசுக்கள் உள்ளன. இது அதிகப்படியானதாகக் கருதப்படலாம், எனவே நாங்கள் இதை இங்கே எடுத்து வந்திருக்கிறோம். இதை கடவுளிடம் திருப்பித் தர முடிவு செய்துள்ளோம்." என்று ஒரு பழங்குடியின விவசாயி AFPஇடம் கூறியிருக்கிறார்.

    கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு, தற்போது தான் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சென்ற வருடம் இந்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தோனேசியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    இந்தோனேசியா

    இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் சுற்றுலா
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  சென்னை

    உலகம்

    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலக செய்திகள்
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா
    ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா

    உலக செய்திகள்

    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி  இந்தியா
    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  இந்தியா
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025