NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
    ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

    ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 11, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள, மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

    பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பசிபிக் பெருங்கடலில் குதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த தீயானது வரலாற்றுச் சிறப்புமிக்க ரிசார்ட் நகரமான, லஹைனாவை முழுவதுமாக அழித்துவிட்டது.

    காட்டுத் தீ, லஹைனா, அதன் துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அழித்ததால், பல கட்டிடங்கள் மற்றும் பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் அழிந்த நிலையில், 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் தீவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அதே நேரத்தில், மவுய் தீவுக்கு சுற்றுலாவுக்காக வந்த பல சுற்றுலாப் பயணிகள், விமான நிலையத்தில் முகாமிட்டு, மவுயிலிருந்து விமானங்கள் புறப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

    biggest disaster after 1960

    1960க்குப் பிறகு ஹவாயில் ஏற்பட்ட மோசமான பேரழிவு

    1960-ஆம் ஆண்டு, ஹவாய், அமெரிக்க மாநிலமாக மாறிய ஒரு வருடத்திற்குப் பிறகு, சுனாமியில் 61 பேர் இறந்ததனர்.

    இதுதான் ஹவாய் சந்தித்த கடைசி மிகப்பெரிய பேரழிவாக இருந்த நிலையில், அதற்கு பிறகு மிகப்பெரிய பேரழிவாக இந்த காட்டுத் தீ கருதப்படுகிறது.

    காட்டுத் தீயால், மவுய் தீவின் 80 சதவீத பகுதிகள் சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தீவை முழுமையாக புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளதாக ஹவாய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, ஹவாய்க்கான பேரிடர் மீட்பு நிதிக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுவசதி மற்றும் பொருளாதார மீட்பு மானியங்களாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்

    அமெரிக்கா

    அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம்  மதுரை
    உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம் உலகம்
    அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    வெள்ளை மாளிகையில் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு  ஜோ பைடன்

    உலகம்

    மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா? உலக செய்திகள்
    அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா  சீனா
    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர் சிங்கப்பூர்

    உலக செய்திகள்

    கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது  கனடா
    இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம் இங்கிலாந்து
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? தாய்லாந்து
    ஆஸ்திரேலியா: இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025