NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர் 
    ரைசி, இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவை கடுமையாக சாடினார்.

    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 12, 2023
    02:44 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போரில் இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாகவும் இஸ்ரேலுக்கு உடந்தையாகவும் இருப்பது அமெரிக்கா தான் என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) தெரிவித்துள்ளார்.

    மேலும், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதற்கு எண்ணெய் மற்றும் பொருட்களை இஸ்ரேலுக்கு தராமல் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

    காசாவில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க சவுதி அரேபியா நடத்திய அவசர அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய ரைசி, இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவை கடுமையாக சாடினார்.

    அது போக, காசா மீது ஏழு அணுகுண்டுகளுக்கு சமமான வெடிகுண்டு தாக்குதலை இதுவரை இஸ்ரேல் நடாத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதுஜே

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மேலும் கூறியதாவது:

    இந்தக் குற்றத்திற்கு முக்கியக் குற்றவாளியாகவும் உடந்தையாகவும் அமெரிக்க அரசாங்கம் உள்ளது.

    ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகளின் புனித வாழ்வைக் காட்டிலும், இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா விரும்புகிறது.

    ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தனது பாதுகாப்பு அமைச்சரவையை உடனடியாக அமைத்த அமெரிக்கா, காசாவின் ஆதரவற்ற மக்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேலை ஊக்குவித்தது.

    தற்போது,காசா மீதான தாக்குதலை சட்டபூர்வமான தற்பாதுகாப்பு என்றும் அமெரிக்கா அழைக்கிறது.

    காசா பகுதியில் நடக்கும் தாக்குதல்கள் கௌரவத்திற்கு தீமைக்கும் இடையிலான மோதலாகும். இந்த போரில் எந்த தரப்பினருக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பதை அனைவரும் தெளிவுபடுத்த வேண்டும்.

    காசாவில் நடக்கும் போரை நிறுத்திவிடாமல் தடுத்து, போரை விரிவுபடுத்தும் அமெரிக்காவின் கைகளில்தான் போரின் ஆயுதம் உள்ளது. அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகம் பார்க்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    அமெரிக்கா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா

    அமெரிக்கா

    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை ஜோ பைடன்
    2024 அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து வெளியேறினார் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் குடியரசு தலைவர்
    'பிரண்ட்ஸ்' நடிகருடனான தனது சிறுவயது நட்பை நினைவு கூர்ந்த ட்ரூடோ கனடா
    செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர் நாசா

    இஸ்ரேல்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது? இந்தியா
    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி  பிரியங்கா காந்தி
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல் துருக்கி
    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025