NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹவாயில் இருக்கும் சொகுசு வீட்டுக்கு தப்பி சென்ற சிலிக்கான் வங்கி CEO
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹவாயில் இருக்கும் சொகுசு வீட்டுக்கு தப்பி சென்ற சிலிக்கான் வங்கி CEO
    கிட்டத்தட்ட $175 பில்லியன் வைப்புத்தொகை தற்போது ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

    ஹவாயில் இருக்கும் சொகுசு வீட்டுக்கு தப்பி சென்ற சிலிக்கான் வங்கி CEO

    எழுதியவர் Sindhuja SM
    Mar 17, 2023
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    தொழில்நுட்பத் துறையில் பெயர்பெற்று, மூன்று தசாப்தங்களாக இயங்கி வந்த சிலிக்கான் வங்கி, மார்ச் 10, 2023 அன்று திவாலானது. இதில் முதலீடு செய்திருந்தவர்கள் பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

    வங்கி மூடப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட $175 பில்லியன் வைப்புத்தொகை தற்போது ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

    வங்கியின் சரிவால் ஏற்பட்ட நிதி குழப்பங்களுக்கு மத்தியில், இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஹவாயில் காணப்பட்டார் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    மேலும், சிலிக்கான் வங்கியின் முன்னாள் CEO கிரெக் பெக்கரும் அவரது மனைவி மர்லின் பாட்டிஸ்டாவும், ஹவாயில் இருக்கும் $3.1 மில்லியன் மதிப்புள்ள தங்கள் சொகுசு வீட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    அமெரிக்கா

    இவருக்கு எதிராக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது

    இந்த தம்பதியினர், திங்கட்கிழமை அன்று சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு தங்கள் சொகுசு காரில் சென்றதாகவும் அங்கிருந்து முதல் வகுப்பு விமானத்தில் ஹவாய் சென்றதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

    மேலும், இந்த முன்னாள் CEO, லஹைனா என்ற பகுதியில் சுற்றி திரிந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

    ஃபெடரல் கட்டுப்பாட்டாளர்களால் SVB மூடப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, $3,578,652.31 மதிப்புள்ள பங்குகளை பொது பங்குகளில் விற்றதால், இவருக்கு எதிராக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் பெண்கள் தினம்
    இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் நோவாக் ஜோகோவிச் விளையாட்டு
    ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர் ஈரான்
    திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன? தொழில்நுட்பம்

    அமெரிக்கா

    கின்னஸ் சாதனை: கண்ணை மூடிக்கொண்டு பந்தை அடித்து விளையாடிய சிறுவன் உலகம்
    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா உலகம்
    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025