Page Loader
நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பீகாரிலும் உணரப்பட்ட அதிர்வுகள்
இதன் விளைவாக இமயமலைப் பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது

நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பீகாரிலும் உணரப்பட்ட அதிர்வுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 28, 2025
08:34 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக இமயமலைப் பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாட்னா, முசாபர்பூர் மற்றும் பீகாரின் அருகிலுள்ள பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தின் பைரப் குண்டாவைச் சுற்றி அதிகாலை 2.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் இந்த நிலநடுக்கத்தை 5.6 ரிக்டர் அளவில் அளந்தது, இந்தியாவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் அதை 5.5 ரிக்டர் அளவில் மதிப்பிட்டது. இருப்பினும், பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது என்றும் அது குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் எனக்கூறப்படுகிறது.

விவரங்கள்

சேதங்கள் குறித்து தகவல்கள் இல்லை

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நில அதிர்வு நடவடிக்கையின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பாட்னாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் கூரை மின்விசிறிகள் குலுங்குவதைக் காட்டும் காணொளிகளை மக்கள் ஆன்லைனில் பகிர்ந்து கொண்டனர். இந்த ஆண்டு ஜனவரியில், திபெத்தின் இமயமலைப் பகுதியில் தொடர்ச்சியாக ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. குறிப்பாக 7.1 ரிக்டர் அளவில் மிக அதிகமாக பதிவான ஒரு நிலநடுக்கத்தில், 125க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.