டொனால்ட் டிரம்ப் எஸ்கேப் பிளான்: ஈரானிய அச்சுறுத்தலால் FBI விமானத்திலிருந்து டிரம்ப் தப்பியோடினாரா?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டபோது, ஈரானின் கொலை அச்சுறுத்தல் காரணமாக தன்னுடைய பிரத்யேக FBI (Air Force One) விமானத்திலிருந்து இரகசியமாக மற்றொரு சிறிய இராணுவ விமானத்திற்கு மாறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 8 அன்று துருக்கியின் அங்காரா விமான நிலையத்திலிருந்து அதிபர் டிரம்ப் புறப்பட்டபோது, அவரைப் படுகொலை செய்ய ஈரான் அமைப்புகளிடமிருந்து நம்பகமான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து, வழக்கமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை ஒரு திசைதிருப்பும் போலி ஏற்பாடாக ஆகப் பயன்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டனர் என அந்த செய்தி தெரிவித்துள்ளது.
இரகசிய இடமாற்றம்
கேட்டரிங் டிரக் மூலம் நடந்த இரகசிய இடமாற்றம்
விபரீதத்தை தவிர்க்க, ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே டிரம்ப் வழக்கமான போயிங் 747 விமானத்திற்குள் ஏறினார்.
இருப்பினும், சில நிமிடங்களில் விமானத்தில் உணவுகளை ஏற்றப் பயன்படுத்தப்படும் கேட்டரிங் டிரக் மூலமாக அவர் ரகசியமாக இறக்கப்பட்டு, அருகில் இருந்த சிறிய சி-32ஏ (C-32A) இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டார்.
டிரம்பின் இரகசியப் பயணத்தின்போது, போலி விமானத்திலிருந்த பத்திரிகையாளர்களுக்கு ஜன்னல் திரைகளை மூடுமாறு வெள்ளை மாளிகை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் இரு வேறு பாதைகளில் பயணித்த விமானங்கள் இங்கிலாந்தை சென்றடைந்தன. டிரம்பின்
இந்த ஆபத்தான பயணம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.