NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை: இந்தியர்களுக்கு பாதிப்பா?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை: இந்தியர்களுக்கு பாதிப்பா?
    டொனால்ட் டிரம்ப், திங்களன்று பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்

    பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை: இந்தியர்களுக்கு பாதிப்பா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 21, 2025
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் 47 வது அமெரிக்க ஜனாதிபதியாக திரும்பிய டொனால்ட் டிரம்ப், திங்களன்று பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    அவற்றுள் மிக முக்கியமானது பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்தார்.

    அதாவது குடியுரிமை பெறாத பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் தானியங்கி குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நடவடிக்கை.

    உத்தரவு

    டிரம்ப் கையெழுத்திட்ட புதிய உத்தரவு கூறுவது என்ன?

    அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவு குறிப்பிடுகிறது.

    "அமெரிக்காவில் பிறக்கும் சட்டவிரோத புலம் பெயர்ந்தவர்கள் குழந்தைகளுக்கு தானாக பிறப்புரிமை குடியுரிமையை அரசு அங்கீகரிக்காது. நாங்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டினரை பரிசோதித்தல் மற்றும் திரையிடல் ஆகியவற்றை மேம்படுத்த உள்ளோம்" என்று டிரம்ப் அதிகாரி திங்களன்று ஒரு மாநாட்டில் தெரிவித்தார்.

    பிறப்புரிமை குடியுரிமை

    பிறப்புரிமை குடியுரிமை என்றால் என்ன?

    பிறப்புரிமைக் குடியுரிமையின்படி, பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எதுவாக இருந்தாலும், அமெரிக்க மண்ணில் பிறந்த எவருக்கும் தானாகவே அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுகிறது.

    இந்த ஏற்பாடு 1868 இல் இயற்றப்பட்டது மற்றும் அமெரிக்காவில் பிறந்த அனைத்து நபர்களுக்கும் குடியுரிமை நீட்டிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நிறுத்தம்

    டிரம்ப் ஏன் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புகிறார்

    பிறப்புரிமைக் குடியுரிமையை "கேலிக்குரியது" என்பதால் முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக டிரம்ப் ஏற்கனவே திட்டவட்டமாக கூறியிருந்தார், ஆனால் அவர் சமூக ஊடக இடுகைகளில் விளக்கியபடி, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே விரும்புவதாக அவர் கூறினார்.

    இந்தியா மற்றும் சீனா உட்பட அமெரிக்காவில் அதிக அளவில் குடியேற்றம் உள்ள நாடுகளின் பிரஜைகள் குறிப்பாக இந்த முறையை சுரண்டியுள்ளனர் என்று டிரம்ப் வாதிட்டார்.

    டிரம்ப், முந்தைய பேட்டியில், "நான் குடும்பங்களை உடைக்க விரும்பவில்லை, எனவே குடும்பத்தை உடைக்காத ஒரே வழி, நீங்கள் அவர்களை ஒன்றாக வைத்திருப்பதுதான், அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும்".

    அதாவது குடும்பங்களை ஒன்றாக வைத்திருப்பதற்காக சட்டப்பூர்வ குடிமக்களும் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டது.

    சட்ட சவால்கள்

    புதிய சட்டதிருத்தம் சட்ட சவால்கள் இல்லாமல் இல்லை

    டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ள நிலையில், வழியில் ஏராளமான சட்ட தடைகள் உள்ளன.

    தவிர, அரசியலமைப்பின் விதிகளை மாற்றுவதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுகிறது மற்றும் செயல்முறை நீண்டது, சவாலானது மற்றும் கடினமானது.

    அமெரிக்க அரசியலமைப்பை திருத்துவதற்கு, ஹவுஸ் மற்றும் செனட் இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை, அதைத் தொடர்ந்து நான்கில் மூன்று பங்கு மாநில சட்டமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    புதிய செனட்டில், ஜனநாயகக் கட்சியினர் 47 இடங்களையும், குடியரசுக் கட்சியினர் 53 இடங்களையும் பெற்றுள்ளனர்.

    சபையில், ஜனநாயகக் கட்சியினர் 215 இடங்களையும், குடியரசுக் கட்சியினர் 220 இடங்களையும் பெற்றுள்ளனர்.

    நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட உடனேயே, புலம்பெயர்ந்தோர் உரிமை வழக்கறிஞர்கள் அவரது நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    பாதிப்பு

    இந்த புதிய சட்ட திருத்தத்தில் இந்தியர்களுக்கு பாதிப்பு உண்டு

    அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் புலம்பெயர்ந்த மக்களில் ஒன்றான இந்திய-அமெரிக்க சமூகம் இந்த மாற்றத்தால் ஆழமாக பாதிக்கப்படும்.

    டிரம்பின் நிர்வாக உத்தரவின்படி கொள்கை மாறினால், தற்காலிக வேலை விசாவில் இருக்கும் (எச்-1பி விசா போன்றவை) அல்லது கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி தானாகவே அமெரிக்க குடியுரிமையைப் பெற மாட்டார்கள்.

    அதே போல, அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள், பிறப்புரிமைக் குடியுரிமையைப் பெறாவிட்டால், 21 வயதுக்குப் பிறகு, தங்கள் பெற்றோரை அமெரிக்காவுக்கு அழைத்து வர மனு செய்ய முடியாது.

    புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவில் இந்திய மாணவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    வெள்ளை மாளிகை
    அமெரிக்கா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    டொனால்ட் டிரம்ப்

    ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சீனா, கனடா, மெக்சிகோவுக்கு கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா
    அமெரிக்காவில் எஃப்.பி.ஐ இயக்குநராக இந்திய வம்சாவளி காஷ் படேலுக்கு பொறுப்பு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா
    பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி; அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை பிரிக்ஸ்
    பைடன் முதல் கிளின்டன் வரை: குடும்ப உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பளித்த அமெரிக்க ஜனாதிபதிகள் அமெரிக்கா

    வெள்ளை மாளிகை

    இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் அமெரிக்கா
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல் இஸ்ரேல்
    இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல் ஈரான்
    மத்திய கிழக்கில் ஈரானால் நடத்தப்படவுள்ள தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது: வெள்ளை மாளிகை ஈரான்

    அமெரிக்கா

    சைபர் தாக்குதலில் சிக்கிய அமெரிக்கா கருவூலம்: சீன ஹேக்கர்கள் காரணமா? ஹேக்கிங்
    அமெரிக்காவில் வாகனம் மோதியதில் 10 பேர் பலி, 30 பேர் காயம் விபத்து
    அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லாவின் சைபர் டிரக்; தீவிரவாத தாக்குதலா? தீவிரவாதம்
    நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதல்: டிரக்கில் இருந்து FBI கண்டுபிடித்தது என்ன? தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025