NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல்
    கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் பரவியது என்கிறது ஒரு புதிய ஆய்வு

    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 21, 2023
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் புதிய பகுப்பாய்வு, கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் பரவியது என்பதற்கான வலுவான சான்றாக இருக்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

    ராக்கூன் நாய்கள் உட்பட பல விலங்குகளின் மரபணுப் பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தான் நோய்தொற்றுக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று திறந்த அறிவியல் இணையதளமான Zenodo.org-வில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹவானான் மொத்த கடல் உணவு சந்தையில் இருந்து தான் கொரோனா பரவி இருக்கிறது என்றும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

    உலகம்

    ஆய்வக விபத்தில் இருந்து கொரோனா பரவ தொடங்கி இருக்கலாம்: அமெரிக்கா

    சில மாதிரிகளில், விலங்குகளில் SARS-CoV-2 நோய்த்தொற்றுகள் இருப்பதைக் குறிக்கும், மனித மரபணுப் பொருள்களைக் காட்டிலும் அதிகமான விலங்குகளின் மரபணுப் பொருட்கள் இருந்தன என்று இந்த அறிக்கை கூறுகிறது.

    கொரோனா பரவலின் போது வெளியிடப்பட்ட பல ஆய்வுகளைப் போலவே, இந்த ஆய்வும் விஞ்ஞான சமூகத்தால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

    ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்த மரபணுத் தரவை முழுமையாகப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டு கொண்டுள்ளது.

    கொரோனா எப்படி பரவ தொடங்கியது என்பதை பற்றி வெளியான மிக சமீபத்திய ஆய்வு இதுவாகும்.

    அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் மற்றும் எரிசக்தி துறையானது கோவிட்-19 ஆய்வக விபத்தில் இருந்து பரவ தொடங்கி இருக்கலாம் என்று கூறி இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    சீனா
    அமெரிக்கா

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    உலகம்

    வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம் அமெரிக்கா
    சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ சீனா
    இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போதே உயிரிழந்த பயணி பாகிஸ்தான்
    மின் கழிவுகளை ரோபோடிக் கையாக மாற்றிய கென்ய கண்டுபிடிப்பாளர்கள் உலக செய்திகள்

    சீனா

    ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா? வணிக செய்தி
    கொரோனா வரவேண்டும் என்று பாதுகாப்பு இல்லாமல் சுத்தும் சீனர்கள் உலகம்
    சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் உலகம்
    சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் - பயணங்களை குறைத்துக்கொள்ள சீன அரசு அறிவுறுத்தல் கொரோனா

    அமெரிக்கா

    அடையாளம் தெரியாத விமானங்களை சுட்டு வீழ்த்தும் அமெரிக்கா: காட்டத்தில் சீனா சீனா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உக்ரைன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025