Page Loader
சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம்
சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து

சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 10, 2023
02:31 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் திங்கட்கிழமை (ஜூலை 10) நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 25 வயதுடைய நபரை சீன காவல்துறை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கான முழுமையான காரணங்கள் வெளியிடப்படவில்லை . எனினும், வேண்டுமென்றே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக மட்டும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. "கத்திக்குத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு ஆசிரியர், இரண்டு பெற்றோர் மற்றும் மூன்று மாணவர்கள் உள்ளனர். மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்." என்று குவாங்டாங் நகர அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

stabbing increases in china schools

சீனாவில் அடிக்கடி பள்ளிகளில் நிகழும் தாக்குதல்கள்

முன்னதாக, ஏப்ரல் 2022 இல் இதேபோன்ற மற்றொரு தாக்குதலில், தெற்கு சீனாவில் உள்ள மழலையர் பள்ளிக்குள் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடுகள் மற்றும் இறுக்கமான பாதுகாப்பு காரணமாக சீனாவில் வன்முறை குற்றங்கள் அரிதானவையாகவே இருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பள்ளிகள் உட்பட பல இடங்களில் கத்தி மற்றும் கோடாரி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த இதுபோன்ற தாக்குதல்களில் சுமார் 100 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். சமூகத்தில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை காரணமாக, கோபத்தை காட்டும் முயற்சியில் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சீன மனநல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.