NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம் 

    பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    10:01 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் கனடா நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

    இந்திய அரசால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒரு காலிஸ்தான்-சீக்கிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஆவார்.

    கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் குருத்வாராவுக்கு வெளியே அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காலிஸ்தான் புலிப் படையின்(கேடிஎஃப்) தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.

    கரண் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் உட்பட நான்கு இந்தியர்கள் நிஜ்ஜாரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

    கனடா 

    இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மீண்டும் சிதையுமா?

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக ஒரு பெரும் குற்றச்சாட்டை கனேடிய அரசாங்கம் கடந்த ஆண்டு முன்வைத்தது.

    அதில் இருந்து இந்திய-கனேடிய இரு நாட்டு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், இத்தாலியில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டின் போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

    இந்த சந்திப்பு குறித்து பேசிய ட்ரூடோ, பொருளாதார உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட உறவுகள் வலுக்க "வாய்ப்பு" இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்திய பயங்கரவாதியான நிஜ்ஜாருக்கு கனேடிய அரசாங்கம் மரியாதை செலுத்தி இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான சண்டையை மீண்டும் தூண்டி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    கனடா

    2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை உலகம்
    "இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி அமித்ஷா
    "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா

    இந்தியா

    புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்?  மத்திய அரசு
    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    'தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது': நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம்  நீட் தேர்வு
    அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு ஆந்திரா

    உலகம்

    ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது ஈரான்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவை தொடர்ந்து, முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார் ஈரான்
    2000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஈரான் அதிபரின் உடல்: உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்  ஈரான்
    ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா ஈரான்

    உலக செய்திகள்

    ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்  தாய்லாந்து
    வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்  லண்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025