NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பொதுமக்களின் பார்வைக்கு முதன்முறையாக திறக்கப்பட்ட பக்கிங்ஹாம் அரண்மனையின் கிழக்குப் பகுதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொதுமக்களின் பார்வைக்கு முதன்முறையாக திறக்கப்பட்ட பக்கிங்ஹாம் அரண்மனையின் கிழக்குப் பகுதி 

    பொதுமக்களின் பார்வைக்கு முதன்முறையாக திறக்கப்பட்ட பக்கிங்ஹாம் அரண்மனையின் கிழக்குப் பகுதி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 10, 2024
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    அரச வரலாறு மற்றும் டிராகன் சின்னங்கள் நிரம்பிய இங்கிலாந்து அரச மாளிகையான பக்கிங்ஹாம் அரண்மனையின் கிழக்கு பகுதி, 175 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதிலிருந்து அரச பயன்பாட்டிற்கு மட்டுமே உள்ளது.

    பொதுமக்களின் பார்வைக்கு வந்தது இல்லை. தனிப்பட்டதாக உள்ளது.

    பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் இருந்துதான், அரச குடும்பம் பொதுமக்களின் பார்வைக்கு தோன்றுவது மரபு.

    விக்டோரியா மகாராணி கிரிமியாவிலிருந்து துருப்புக்களை வரவேற்றது முதல் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி வரை அவரது பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டம் வரை பார்த்தது இந்த அரண்மனை.

    ஆனால் 175 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதிலிருந்து அரண்மனையின் கிழக்குப் பகுதி எப்படி இருக்கும் என பொதுமக்கள் யாரும் பார்த்ததில்லை. இந்நிலையில், தற்போது அரச குடும்பம் அதற்கொரு வாய்ப்பை தருகிறது.

    பக்கிங்ஹாம் அரண்மனை டூர்

    பொதுமக்களுக்காக பக்கிங்ஹாம் அரண்மனை டூர்

    இந்த அரண்மனை பகுதியை சுற்றிப்பார்க்க £75 கட்டணம் வசூலிப்படும்.

    தனி அறைகள் நிறைந்த இந்த பகுதியில், டிராகன் படங்கள், பீங்கான் சாமான்கள், அலமாரிகள், ஒன்பது அடுக்கு அறுகோண சீன விகாரங்கள், அலங்கரிக்கப்பட்ட கில்டட் திரை கம்பங்கள், நெருப்பிடம் மற்றும் கூரைகள் நிறைந்திருக்கும் என தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த பகுதி, ஜார்ஜ் IV, விக்டோரியா மஹாராணியால் பக்கிங்ஹாம் அரண்மனையின் ஒரு பாகமாக கட்டப்பட்டது.

    இந்த பகுதி தான் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு 10 ஆண்டு கால திட்டமாகும். இதற்கு £370 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

    இங்குள்ள பால்கனியும், "மக்களுடன் இணைவதற்காக" விக்டோரியாவின் கணவர் இளவரசர் ஆல்பர்ட்டின் யோசனைபடி கட்டப்பட்டது என்று மன்னரின் கலைப் படைப்புகளின் கணக்கெடுப்பாளரான கரோலின் டி கிடாட் கூறுகிறார்.

    பால்கனி

    பார்வையாளர்கள் பால்கனிக்கு அனுமதி இல்லை 

    பார்வையாளர்கள் பால்கனியில் நுழைய முடியாது என்றாலும், மாலுக்கு கீழே உள்ள ஜன்னல்களை மூடியுள்ள நெட் திரைச்சீலைகள் மூலம் அரண்மனை நுழைவு வாயிலை பார்க்கலாம்.

    அதில் இருந்து பல இளவயது அரச குடும்பத்தினர் அரசு நிகழ்வுகளில் எட்டிப்பார்த்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

    பால்கனியின் பின்புறம் உள்ள மைய அறையில், வலைகளால் கவசமாக, புதிதாக மீட்டெடுக்கப்பட்ட கண்ணாடி சரவிளக்கின் சிறப்பம்சங்கள், தாமரை மலரைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சீனப் பேரரசர் குவாங்சுவால் விக்டோரியாவுக்கு,1897 இல் அவரது வைர விழா அன்று வழங்கப்பட்ட இரண்டு சீன 18 ஆம் நூற்றாண்டின் இம்பீரியல் சில்க் சுவர் அலங்காரமும் அடங்கும்.

    வரவேற்பறை

    மஞ்சள் வரவேற்பறை

    எலிசபெத்-II உருவப்படக் கலைஞர்களுக்காக அமர்ந்திருந்த மஞ்சள் வரவேற்பறை, தற்போது அரச பார்வையாளர்களுக்கும், வரவேற்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

    முன்னர் மஞ்சள் டமாஸ்க் இருந்த இந்த அறையினை ராணி மேரி, 18ஆம் நூற்றாண்டில் கையால் வரைந்த மரங்கள் மற்றும் பறவைகள் அடங்கிய சீன வால்பேப்பராக மாற்றினார்.

    தற்போது வால்பேப்பர் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் தொங்கவிடப்பட்டுள்ளது.

    மேலும் ராயல் பெவிலியனில் ராணி மேரி வைத்திருந்த பொருட்களில் ஒன்றான இரண்டு ஒன்பது அடுக்கு சீன பீங்கான் விகாரங்கள் மற்றும் இரண்டு டர்க்கைஸ் சீன சிங்கங்களை உள்ளடக்கிய கடிகாரத்தையும் பார்வையாளர்கள் ரசிக்கலாம்.

    ராயல் பெவிலியனின் உட்புறம் சுமார் ஒரு மில்லியன் கலைப் படைப்புகள் மற்றும் 500 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னர்கள் மற்றும் ராணிகளால் பரிசளிக்கப்பட்ட அல்லது வாங்கிய பொருட்களைக் கொண்டுள்ளது.

    தாழ்வாரம்

    ஓவியங்கள் நிறைந்த தாழ்வாரங்கள்

    அரண்மனையின் முழு அகலத்திலும், பரந்து விரிந்து கிடக்கும் தாழ்வாரங்களிலும், அரச ஓவியங்கள், அரசி விக்டோரியாவுக்கு பேரரசர் நிக்கோலஸ் 1 பரிசளித்த ரஷ்ய ஓவியங்கள் மற்றும் 1863 விண்ட்சர் திருமணத்தின் வில்லியம் பவல் ஃப்ரித்தின் பெரிய படைப்புகள் உள்ளிட்டவை தொங்கவிடப்பட்டுள்ளன.

    தாழ்வாரத்தின் ஒரு பகுதி ஆங்கிலேய கைவினைத்திறனின் கருங்கல் அலமாரிகளின் அணிவகுப்புடன் வரிசையாக உள்ளது.

    மன்னரின் யோசனை

    பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியது மன்னர் சார்லஸ்-இன் யோசனை 

    சார்லஸ் மன்னரின் யோசனையாக தான் இந்த கிழக்குப் பகுதியின் சுற்றுப்பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது இந்த சுற்றுப்பயணம்.

    எனினும், ஒரே நேரத்தில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த ஆண்டு தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    அரண்மனையின் மாநில அறைகளுக்கான நிலையான டிக்கெட்டுடன் அவை வாங்கப்பட வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    அரச குடும்பம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இங்கிலாந்து

    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்  பிரான்ஸ்
    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மீதான சிறுநீரகக் திருட்டு குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு விசாரணை டெல்லி
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு கனடா

    அரச குடும்பம்

    கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல் கேட் மிடில்டன்
    இளவரசர் ஹாரி- மனைவி மேகன் மார்க்கெல் உறவில் விரிசலா? சொந்த நாட்டிற்கு திரும்ப திட்டம் என அறிக்கை இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025