NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கியில் இறந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணியின் இதயம் எங்கே? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கியில் இறந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணியின் இதயம் எங்கே? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்
    துருக்கியில் இறந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணியின் இதயம் காணாமல் போனதால் பரபரப்பு

    துருக்கியில் இறந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணியின் இதயம் எங்கே? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 26, 2025
    02:31 pm

    செய்தி முன்னோட்டம்

    28 வயதான பிரிட்டிஷ் பெண் பெத் மார்ட்டின், துருக்கியில் குடும்ப விடுமுறையின் போது மர்மமான சூழ்நிலையில் பரிதாபமாக இறந்தார்.

    இது சர்வதேச அளவில் கவனம் பெற்ற நிலையில், பிரேத பரிசோதனையில் அவரது இதயம் காணவில்லை என்பது தெரியவந்ததை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது.

    பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான பெத் மார்ட்டின், ஏப்ரல் 27 அன்று இஸ்தான்புல்லுக்கு விமானத்தில் செல்லும்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.

    ஆரம்பத்தில் உணவு கெட்டுபோனதன் காரணமாக இது நடந்திருக்கலாம் எனக் கூறிய நிலையில், விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்து மர்மாரா பல்கலைக்கழக பெண்டிக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அடுத்த நாள், ஏப்ரல் 28 அன்று அவர் இறந்தார்.

    துருக்கி 

    சந்தேகத்தைக் கிளப்பிய துருக்கியின் அறிக்கை

    துருக்கிய சுகாதார அமைச்சகம் அவரது மரணத்திற்கு பல உறுப்புகள் செயலிழப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகக் கூறியது, ஆனால் அதற்கான உறுதியான விளக்கத்தை வழங்கத் தவறிவிட்டது.

    அவரது கணவர் லூக் மார்ட்டின், துருக்கிய அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

    இதில் அவரது மனைவிக்கு விஷம் கொடுத்ததாகவும், மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஆயுதமேந்திய அதிகாரிகளால் விசாரணையை எதிர்கொண்டதாகவும் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த களேபரங்களுக்குப் பிறகு, அவரது உடல் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் பிரேத பரிசோதனை அதிகாரிகள் அவரது இதயம் காணாமல் போனதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தனர், இது மேலும் சீற்றத்தைத் தூண்டியது.

    விசாரணை

    மருத்துவ அலட்சியம் குறித்து விசாரணை

    துருக்கிய அதிகாரிகள் எந்த அறுவை சிகிச்சை முறைகளையும் செய்ய மறுத்து, உறுப்பு நீக்க கருத்தை நிராகரித்துள்ளனர். பெத்துக்கு ஒவ்வாமை இருந்த போதிலும் பென்சிலின் வழங்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட மருத்துவ அலட்சியத்தை குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் விடப்பட்டதாகக் கூறுகின்றனர்.

    விசாரணை நடந்து வருகிறது, மேலும் குடும்பத்தை ஆதரிப்பதற்காக GoFundMe பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது, இதன் நோக்கம் £250,000 திரட்டுவதாகும்.

    சுற்றுலா பயணிகள் செல்வதற்கு விரும்பும் நாடுகளில் ஒன்றாக திகழும் துருக்கியில் நடந்துள்ள இந்த சம்பவம், அங்கு வெளிநாட்டினரின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துருக்கி
    பிரிட்டன்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் பொழுதுபோக்கு வரி 4% ஆகக் குறைப்பு; தமிழக அரசு உத்தரவு கோலிவுட்
    புவி வெப்பமடைவதால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் புற்றுநோய்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஒரே நாளில் 3 தங்கம் வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் அசத்தல் ஆசிய சாம்பியன்ஷிப்
    2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவீதம் வளர்ச்சி ஜிடிபி

    துருக்கி

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சிரியா
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    பிரிட்டன்

    கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வினோத் கிஷன் நடிப்பை பாராட்டிய சந்தீப் கிஷன் தனுஷ்
    பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம்  லண்டன்
    இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம்  இங்கிலாந்து
    உலக நீரிழிவு நோய் தினம்- காலனி ஆதிக்கத்திற்கும், இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு? இந்தியா

    உலகம்

    கனடாவில் நூற்றாண்டு பழமையான சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்தி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அட்டூழியம் கனடா
    பாகிஸ்தானில் கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்து அமைச்சர் மீது தாக்குதல் பாகிஸ்தான்
    சேட் வெக்கன்டேவை அறிவித்தது வாடிகன்; புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? வாடிகன்
    சீனாவின் தங்க ஏடிஎம் உங்கள் நகைகளை சில நிமிடங்களில் பணமாக மாற்றுகிறது சீனா

    உலக செய்திகள்

    இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது அமெரிக்கா
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் கேஃஎப்சி கடைகள் மீது தாக்குதல்; ஒரு ஊழியர் பலியான பரிதாபம் பாகிஸ்தான்
    போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு எப்போது? கலந்து கொள்ளும் முக்கிய உலக தலைவர்கள் யார்? போப் பிரான்சிஸ்
    ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025