NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு
    உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம்

    உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 23, 2024
    08:06 am

    செய்தி முன்னோட்டம்

    தென்னாபிரிக்காவின் போட்ஸ்வானாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் இதுவே மிக பெரிய வைரமாகும்.

    இதனை போட்ஸ்வானா நாட்டின் அதிபர் மொக்வீட்சி மசிசி உலகின் பார்வைக்கு காட்சிப்படுத்தினார்.

    மனிதனின் கை முஷ்டி அளவிலான இந்த வைரக்கல் 2,492 காரட் மதிப்புடையது ஆகும்.

    சுரங்கத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய கல் என்று போட்ஸ்வானா அரசாங்கம் கூறுகிறது.

    1905க்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும்.

    இன்னும் பெயரிடப்படாத இந்த வைரத்தின் எடை தோராயமாக அரை கிலோகிராம் என கணக்கிடப்பட்டுள்ளது.

    விற்பனை

    பொது விற்பனைக்கு வருவது குறித்து விரைவில் முடிவு

    இந்த வைரத்தை மதிப்பிடுவது அல்லது எப்படி விற்கப்படும் என்பதை முடிவு செய்வது மிக விரைவில் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போட்ஸ்வானாவில் உள்ள அதே சுரங்கத்தில் இருந்து மற்றொரு பெரிய வைரம் 2016இல் $63 மில்லியனுக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வைரத்தை கண்டுபிடித்த கனடிய சுரங்க நிறுவனமான Lucara Diamond Corp. இன் போட்ஸ்வானா நிர்வாக இயக்குனர் நசீம் லஹ்ரி, "இது ஒரு வரலாற்று கண்டுபிடிப்பு" என்றார்.

    மத்திய போட்ஸ்வானாவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இருந்து இந்த சரித்திர வைரத்தை மீட்டெடுத்ததாக லுகாரா புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

    இது ஒரு "உயர்தர" கல் என்றும், அது அப்படியே காணப்பட்டதாகவும் லூகாரா கூறினார்.

    இது பெரிய வைரங்களைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.

    எடை

    எடைப்படி இரண்டாவது பெரிய வைரம்

    எடைப்படி, கடந்த 119 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரமாகவும், 1905ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லினன் வைரத்திற்குப் பிறகு சுரங்கத்திலிருந்து தோண்டப்பட்ட இரண்டாவது பெரிய வைரமாகவும் இது உள்ளது.

    புகழ்பெற்ற கல்லினன் வைரம் 3,106 காரட்கள் மதிப்புடையது. இது பின்னர் கற்களாக வெட்டப்பட்டது.

    அவற்றுள் சில பிரிட்டிஷ் கிரவுன் நகைகளின் ஒரு பகுதியாக தற்போது உள்ளது.

    அதேபோல், 1800 களின் பிற்பகுதியில் பிரேசிலில் ஒரு பெரிய, குறைவான தரம் கொண்ட கருப்பு வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் அது தரையின் மேற்பரப்பில் ண்டுபிடிக்கப்பட்டது மற்றும் ஒரு விண்கல்லின் ஒரு பகுதியாக இருந்ததாக நம்பப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென்னாப்பிரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ  பிரதமர் மோடி
    'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும் இந்தியா
    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார் புற்றுநோய்

    உலகம்

    41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி இந்தியா
    புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டது WHO  உலக சுகாதார நிறுவனம்
    ஈரானிய சீர்திருத்தவாதியான பெசெஷ்கியன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்  ஈரான்
    பூமி சீராக ஓடி கொண்டிருக்கிறது! 2024க்கு லீப் விநாடி தேவையில்லை அறிவியல்

    உலக செய்திகள்

    ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி ரஷ்யா
    போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை அமெரிக்கா
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    நைஜீரியாவில் பல இடங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய பெண்கள்: 18 பேர் பலி ஆப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025