NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன்
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகள். படம்-ஏஎஃப்பி

    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன்

    எழுதியவர் Srinath r
    Nov 14, 2023
    11:15 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் என இஸ்ரேலிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனையை சுற்றி நடைபெறும் போரால், அல்-ஷிஃபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மருத்துவமனையை பொருத்தவரையில் குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

    "வடக்கு காசாவில் ஹமாஸ் இடம் உள்ள எரிபொருளை, அவர்கள் மருத்துவமனைக்கு வழங்குவதை பார்க்க விரும்புவதாக" அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரின் கருத்துக்களை தொடர்ந்து,

    அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    மயானமாக மாறிவரும் அல்-ஷிஃபா மருத்துவமனை- டபிள்யுஎச்ஓ

    அல்-ஷிஃபா மருத்துவமனை மிகப்பெரிய மயானமாக மாறி வருவதாக, உலக சுகாதார அமைப்பு(டபிள்யுஎச்ஓ) கூறியுள்ளது.

    வடக்கு காசாவில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையைச் சுற்றி, கடந்த சில நாட்களாக போர் தீவிரமடைந்துள்ளது.

    மருத்துவமனை அடியில் உள்ள பதுங்கு குழிகளை ஹமாஸ் கட்டளை மையங்களாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.

    இதை மருத்துவமனை நிர்வாகமும், ஹமாசும் முழுவதுமாக மறுத்துள்ளது.

    "மருத்துவமனையைச் சுற்றி இறந்தவர்களின் உடல்கள் உள்ளன, அவை கவனிக்கப்படவோ, புதைக்கவோ எடுத்துச் செல்ல முடியவில்லை" என டபிள்யுஎச்ஓ செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.

    "மருத்துவமனையில் உள்ள பிணங்களை வெளியே எடுத்துச் சென்று புதைக்க இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை, மருத்துவமனையில் உள்ள பிணங்களை நாய்கள் தின்கின்றன" என மருத்துவர் முகமது அபு செல்மியா கூறியுள்ளார்.

    3rd card

    இஸ்ரேல் தொடர்பு கொள்ளவில்லை- அல்-ஷிஃபா மருத்துவர்

    அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போருக்கு பின்னர், காசாவிற்குள் வரும் எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை துண்டித்து விட்டது.

    இந்நிலையில், அல்-ஷிஃபா மருத்துவமனையில் எரிபொருள், மின்சாரம் இல்லாமல் மருத்துவப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது.

    மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாமல் தற்போது வரை 3 குறைமாத குழந்தைகளும், 7 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அச்கிச்சை பெற முடியாததால் ஓரிரு நாட்களே உயிர் வாழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அம்மருத்துவமனையின் மருத்துவர் அபு செல்மியாவிடம், இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளை மீட்க முன்வந்ததும், எரிபொருளை அனுப்பியது குறித்தும் பிபிசி கேட்டது.

    அதற்கு அவர், இஸ்ரேல் ராணுவம் அந்த திட்டங்களுடன் தங்களை அணுகவில்லை எனவும், மாறாக தாங்கள்தான் அவர்களை தொடர்புகொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    போர்
    இஸ்ரேல்
    இஸ்லாம்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா

    இஸ்ரேல்

    துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல் துருக்கி
    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா ஹமாஸ்
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்லாம்

    நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து   பண்டிகை
    'இந்திய மதங்களில் தனித்த பெருமையை கொண்டது இஸ்லாம்' : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியா
    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள் தமிழ்நாடு
    இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025