NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்
    பங்களாதேஷ் இந்துக்கள் போராட்டம்

    பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 11, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நடந்த இந்த போராட்டம், இந்து சமூகத்தின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக அமைந்தது.

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அகற்றப்பட்ட பின்னர் பல வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து அவர்கள் நீதி மற்றும் பாதுகாப்பைக் கோரி இந்த போராட்டத்தை நடத்தினர்.

    குறிப்பாக, டாக்கா, சட்டோகிராம், பாரிசல், தங்கைல் மற்றும் குறிகிராம் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் அதிக அளவில் கூடினர்.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்துக்கள் போராட்டம்

    Hindus, Jews and Christians protest outside the BBC HQs in London over lack of global media attention on persecution of Hindus in Bangladesh. pic.twitter.com/WG6XkOa7Nw

    — Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 11, 2024

    அரசு கண்டனம்

    சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு இடைக்கால அரசு கண்டனம்

    ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பங்களாதேஷில் குறைந்தது இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 205 தாக்குதல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த வன்முறையின் விளைவாக, ஆயிரக்கணக்கான பங்களாதேஷ் இந்துக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர்.

    இந்நிலையில், பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மது யூனுஸ், இந்தத் தாக்குதல்கள் கொடூரமானது என்று கண்டனம் தெரிவித்தார்.

    "அவர்கள் இந்த நாட்டு மக்கள் இல்லையா? நாட்டைக் காப்பாற்ற முடிந்த உங்களால் சில குடும்பங்களைக் காப்பாற்ற முடியவில்லையா?" என்று அவர் போராட்டக்காரர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அனைத்து இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த குடும்பங்களையும் பாதிப்பிலிருந்து பாதுகாக்குமாறு மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    போராட்டம்
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்களாதேஷ்

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை

    போராட்டம்

    கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு தமிழ்நாடு
    காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம்  தமிழ்நாடு
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு

    உலக செய்திகள்

    அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம்  அமெரிக்கா
    தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம்  அமெரிக்கா
    2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள் உலகம்
    பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம் அமெரிக்கா

    உலகம்

    நைஜீரியாவில் பல இடங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய பெண்கள்: 18 பேர் பலி ஆப்பிரிக்கா
    K-pop இசையை கேட்டதற்காக 22 வயது இளைஞரை தூக்கிலிட்டது வட கொரியா வட கொரியா
    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  ரஷ்யா
    மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா  ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025