NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பதவியிலிருந்து நீக்க தீவிரம் காட்டும் பங்களாதேஷ் ராணுவ தளபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பதவியிலிருந்து நீக்க தீவிரம் காட்டும் பங்களாதேஷ் ராணுவ தளபதி
    முகமது யூனுஸை பதவியிலிருந்து நீக்க தீவிரம் காட்டும் பங்களாதேஷ் ராணுவ தளபதி

    தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பதவியிலிருந்து நீக்க தீவிரம் காட்டும் பங்களாதேஷ் ராணுவ தளபதி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 26, 2025
    06:48 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷ் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், திட்டமிடப்பட்ட தேர்தலுக்கு முன்னதாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிஎன்என்-நியூஸ் 18 இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.

    தற்போதைய இடைக்கால ஏற்பாட்டில் பங்களாதேஷ் ராணுவத் தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அரசியல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான அரசியலமைப்பு மற்றும் மூலோபாய நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    தேர்தல்களுக்காக ஜூன் வரை காத்திருப்பது குறித்து ஜெனரல் ஜமான் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், இடைக்கால அரசாங்கத்தின் சட்ட அடித்தளம் பலவீனமானதாகக் கருதுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தல்

    90 நாட்களுக்குள் தேர்தல்

    பங்களாதேஷ் அரசியலமைப்பின் கீழ், முந்தைய அரசாங்கம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், இந்த காலக்கெடு இப்போது மீறப்பட்டுள்ளதாக பலர் நம்புகின்றனர்.

    முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக ஷேக் ஹசீனா மற்றும் கலீதா ஜியா தலைமையிலான போட்டி அரசியல் பிரிவுகளை ஒன்றிணைக்க ஜமான் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த அரசியல் முயற்சிகள் தோல்வியடைந்தால், ராணுவத் தளபதி தற்காலிக ராணுவ ஆட்சியை அமல்படுத்தலாம் அல்லது ஜனாதிபதி முகமது ஷஹாபுதீனை அரசியலமைப்பின் 58வது பிரிவை செயல்படுத்த ஊக்குவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    இது ஆட்சி சீர்குலைவு ஏற்பட்டால் அவசரகால அதிகாரங்களை அனுமதிக்கிறது. இடைக்கால நிர்வாகத்தை கலைத்து உடனடியாக தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க ராணுவம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    உலகம்
    உலக செய்திகள்
    ஆசியா

    சமீபத்திய

    தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பதவியிலிருந்து நீக்க தீவிரம் காட்டும் பங்களாதேஷ் ராணுவ தளபதி பங்களாதேஷ்
    பேலன்ஸ் சரிபார்ப்புகள் மற்றும் ஆட்டோபே முறையில் மாற்றங்களைக் கொண்டு வரவுள்ள புதிய UPI விதிகள் யுபிஐ
    ஜங்க் ஃபுட் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் ஆரோக்கியம்
    மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் சேவை நிறுத்தம் மும்பை

    பங்களாதேஷ்

    பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்ற பங்களாதேஷ் அரசு முடிவு ஷேக் ஹசீனா
    கட்டணங்களை செலுத்தாததால் பங்களாதேஷிற்கான மின்சார விநியோகத்தை குறைத்தது அதானி நிறுவனம் அதானி
    பங்களாதேஷ் அரசியல் ஸ்திரமின்மையால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி பலமடங்கு உயர்வு இந்தியா

    உலகம்

    கனடாவில் நூற்றாண்டு பழமையான சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்தி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அட்டூழியம் கனடா
    பாகிஸ்தானில் கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்து அமைச்சர் மீது தாக்குதல் பாகிஸ்தான்
    சேட் வெக்கன்டேவை அறிவித்தது வாடிகன்; புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? வாடிகன்
    சீனாவின் தங்க ஏடிஎம் உங்கள் நகைகளை சில நிமிடங்களில் பணமாக மாற்றுகிறது சீனா

    உலக செய்திகள்

    இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது அமெரிக்கா
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் கேஃஎப்சி கடைகள் மீது தாக்குதல்; ஒரு ஊழியர் பலியான பரிதாபம் பாகிஸ்தான்
    போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு எப்போது? கலந்து கொள்ளும் முக்கிய உலக தலைவர்கள் யார்? போப் பிரான்சிஸ்
    ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு ஈரான்

    ஆசியா

    வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே நெஸ்லே
    தென்கிழக்காசியாவில் யாகி சூறாவளியால் கடும் சேதம்; 500க்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம் சூறாவளி
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025