NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
    2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மூன்று பேரில் பியாலியாட்ஸ்கியும் ஒருவர்.

    அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 03, 2023
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

    "பொது ஒழுங்கை கடுமையாக மீறும் நடவடிக்கைகள்", கடத்தல் மற்றும் அதற்கு நிதியுதவி செய்ததார் என்ற குற்றசாட்டுகள் அவர் மீது போடப்பட்டுள்ளதாக வியாஸ்னா மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.

    60 வயதான பியாலியாட்ஸ்கியின் ஆதரவாளர்கள், பெலாரஷ்ய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் சர்வாதிகார ஆட்சி பியாலியாட்ஸ்கியின் வாயை அடைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

    2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மூன்று பேரில் பியாலியாட்ஸ்கியும் ஒருவர்.

    2021ஆம் நடந்த தேர்தலின் போது தெரு போராட்டங்கள் செய்ததற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

    அப்போது, எதிர்க்கட்சிக்கு நிதியளிப்பதற்காக பணம் கடத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    வியாஸ்னா

    லுகாஷென்கோ விமர்சகர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்: வியாஸ்னா

    2020இல் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் அராஜகத்தை எதிர்கொண்டனர். மேலும், லுகாஷென்கோ விமர்சகர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தற்போது, பியாலியாட்ஸ்கி இரண்டு சக பிரச்சாரகாரர்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

    இவருடன் கைது செய்யப்பட்ட வாலண்டைன் ஸ்டெபனோவிச் மற்றும் விளாடிமிர் லாப்கோவிச் ஆகியோருக்கும் சிறைத்தண்டனை வழக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெபனோவிச்சிற்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும் லாப்கோவிச்சுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல்களை 1996இல் பியாலியாட்ஸ்கியால் நிறுவப்பட்ட வியாஸ்னா கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலக செய்திகள்

    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO உலகம்
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    கிசா பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உலகம்
    சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு சீனா

    உலகம்

    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் தென் கொரியா
    சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம் இந்தியா
    பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் மோடி
    உலக அமைதி மற்றும் புரிதல் நாள்: அதன் வரலாற்றையும், முக்கியத்துவத்தை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025