
ஈரான் வான்வெளி மூடப்பட்டதால் கடும் இடையூறைச் சந்தித்துள்ள ஏர் இந்தியா விமானங்கள்
செய்தி முன்னோட்டம்
ஈரான் மீதான இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச விமானப் பயணம், குறிப்பாக ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விமானங்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள்ளன.
பதட்டமான புவிசார் அரசியல் சூழ்நிலை ஈரான், ஈராக் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் வான்வெளியை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.
இதனால் ஏர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க அளவு வழித்தடங்கள் மாற்றப்பட்டு நீண்ட தூர விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலைய நடவடிக்கைகள் நிலையானதாக இருந்தாலும், சில விமான அட்டவணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலையம் எக்ஸ் தளத்தில் ஒரு பொது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள்
பயணிகளுக்கு அட்வைஸ்
பயணிகள் உடனடி அப்டேட்களுக்கு நேரடியாக விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும், துல்லியமான தகவல்களுக்கு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
குடிமக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும், அனைத்து உள்ளூர் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விமானங்கள்
ஏர் இந்தியாவின் திருப்பி விடப்பட்ட விமானங்கள்
ஏர் இந்தியா பல முக்கிய சர்வதேச விமானங்களை மாற்று நகரங்களுக்கு திருப்பிவிட்டுள்ளது.
அதன்படி, AI130 (லண்டன்-மும்பை) வியன்னாவுக்கும், AI102 (நியூயார்க்-டெல்லி) ஷார்ஜாவுக்கும், AI116 (நியூயார்க்-மும்பை) ஜெட்டாவுக்கும், AI101 (டெல்லி-நியூயார்க்) பிராங்பேர்ட்/மிலானுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன.
கூடுதலாக, AI129 (மும்பை-லண்டன்), AI103 (டெல்லி-வாஷிங்டன்) மற்றும் AI189 (டெல்லி-டொராண்டோ) புறப்பட்ட விமான நிலையங்களுக்கே திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும், இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடங்கள், பணத்தைத் திரும்பப் பெறுதல், இலவச மறு அட்டவணை மற்றும் மாற்று பயணத் திட்டங்கள் உள்ளிட்ட ஆதரவை வழங்குவதாக ஏர் இந்தியா உறுதியளித்துள்ளது.