NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவுடனான எல்லை மோதல்; 75% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவுடனான எல்லை மோதல்; 75% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
    சீனாவுடனான 75% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

    சீனாவுடனான எல்லை மோதல்; 75% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 12, 2024
    07:19 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வியாழன் (செப்டம்பர் 12) அன்று, சீனாவுடனான சமீபத்திய எல்லை மோதலில் தோராயமாக 75 சதவிகிதம் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

    கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் எல்லை மோதல் பிரச்சினையில், எல்லையில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கல் தான் பெரிய பிரச்சினை என்பதை ஜெய்சங்கர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

    சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர் அங்குள்ள ஒரு சிந்தனைக் குழுவில் அமர்வில் பேசியபோது, ஜூன் 2020இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்கள் இந்தியா-சீனா உறவுகளை முழுமையாக பாதித்தது என்றார்.

    பிரச்சினைக்கு தீர்வு காண இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

    இராணுவமயமாக்கல்

    இராணுவமயமாக்கல் பெரிய பிரச்சினை: ஜெய்சங்கர்

    எல்லையில் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்தாலும், நாங்கள் இருவருமே படைகளை நெருக்கமாக கொண்டு வந்ததில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது என்றும், அந்த வகையில் எல்லையில் இராணுவமயமாக்கல் உள்ளது என்றும் அவர் கூறினார்.

    இந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட்டால் உறவை மேம்படுத்த முடியும் என ஜெய்சங்கர் மேலும் கூறினார்.

    விரிவான இராஜதந்திர மற்றும் இராணுவப் பேச்சுக்களைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பல பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்கியபோதும், கிழக்கு லடாக்கில் சில உராய்வு புள்ளிகளில் இந்திய மற்றும் சீனத் துருப்புக்கள் அருகருகே நிறுத்தப்பட்டுள்ளன.

    எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவும் வரை சீனாவுடனான உறவு சாதாரணமாக இருக்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    இந்தியா
    எல்லைப் பிரச்சனை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சீனா

    பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி  பாகிஸ்தான்
    அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா அருணாச்சல பிரதேசம்
    AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு
    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி இந்தியா

    இந்தியா

    ஆகஸ்ட் மாதத்தில் சரிவை 18% சரிவு; இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் பின்னடைவு இரு சக்கர வாகனம்
    விநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் விநாயகர் சதுர்த்தி
    தேசிய ஆசியர் தினம் செப்டம்பர் 5 கொண்டாடுவது ஏன்? வரலாறும் சுவாரஸ்ய தகவல்களும் ஆசிரியர்கள் தினம்
    சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; இந்தியாவில் பல சிங்கப்பூர்கள்; பிரதமர் மோடியின் பயண ஹைலைட்ஸ் சிங்கப்பூர்

    எல்லைப் பிரச்சனை

    அக்சாய் சின் பகுதியில் ராணுவக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, ஏன்? சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025