NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் உயிரிழந்த சோகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் உயிரிழந்த சோகம்
    தொழுகையின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் உயிரிழந்த சோகம்

    மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் உயிரிழந்த சோகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 31, 2025
    12:58 pm

    செய்தி முன்னோட்டம்

    மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.

    மியான்மார் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 60 மசூதிகள் சேதமடைந்தன என்று வசந்த புரட்சி மியான்மர் முஸ்லிம் வலையமைப்பின் வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர் துன் கீ திங்களன்று தெரிவித்தார்.

    இதுவரை நிலநடுக்கத்தில் கொல்லப்பட்ட 1,700 க்கும் மேற்பட்டோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில், மசூதிகளில் கொல்லப்பட்டவர்களும் அடங்கியுள்ளனரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    பலி எண்ணிக்கை

    மியான்மார் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

    மியான்மரை தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக, இடிபாடுகளில் இருந்து அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

    மேலும் 3,400 பேர் காயமடைந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் அரசு நடத்தும் எம்ஆர்டிவிக்கு தெரிவித்தார்.

    வெள்ளிக்கிழமை நண்பகலில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் நெய்பிடாவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே உட்பட பரவலான சேதம் ஏற்பட்டது.

    மண்டலே அருகே மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கத்தில், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மேலும் நகரின் விமான நிலையம் போன்ற பிற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிலநடுக்கம்

    சமீபத்திய

    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி

    நிலநடுக்கம்

    செங்கல்பட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள்  செங்கல்பட்டு
    சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 110க்கும் மேற்பட்டோர் பலி சீனா
    கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி? கூகுள்
    இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்தோனேசியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025