வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு
வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையம் கொமிலாவில் இருந்து தென்மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. வங்கதேசத்தில் காலை 9:05 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்(NCS) தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் ஹூக்ளியின் பல்வேறு மாவட்டங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை 8:25 மணியளவில் லடாக்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. லடாக் நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைத்திருந்ததாக NCS கூறியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தாலும், இதுவரை உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை.