NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி
    தாக்குதல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட பல வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன.

    பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jul 31, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் ஒரு இஸ்லாமியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அரசியல் பேரணியின் போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

    அரசாங்க கூட்டணி கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-எஃப்(JUI-F) கட்சியை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

    இந்த குடுவெடிப்பில் 10 கிலோகிராம் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக KP காவல்துறை இன்ஸ்பெக்டர் அக்தர் ஹயாத் கான் தெரிவித்துள்ளார்.

    பஜாவுர் மாவட்டத்தில் ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ​​மாலை 4 மணியளவில்(உள்ளூர் நேரம்) தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    சஞ்சிகை

    பஜாவுர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது

    காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பஜாவுர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    படுகாயமடைந்தவர்கள் பஜாவுரிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மாகாண தலைநகர் பெஷாவரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதனையடுத்து, பஜாவுர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குண்டுவெடிப்பு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தாக்குதல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட பல வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன.

    அதில் ஒரு வீடியோவில், மக்கள் ஒரு அரசியல் தலைவருக்காக முழக்கம் எழுப்புவதை காண முடிந்தது. 'ஹஸ்ரத் மௌலானா அப்துல் ரஷீத் சஹாப்... ஜிந்தாபாத், ஜிந்தாபாத்!', என்று அவர்கள் முழக்கம் எழுப்பி கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

    இக்

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் 

    கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அமர்ந்திருந்த மேடைக்கு மிக அருகில் சென்ற பிறகே, அந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும், ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு எதிரியான இஸ்லாமிய அரசு(IS) தீவிரவாத குழு இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இது குறித்து காவல்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் குடியரசு தலைவர் ஆரிப் அல்வி ஆகியோர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அதோடு, காயமடைந்த மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    டிஜிஓ

    இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை

    அடுத்த சில வாரங்களில் பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றம் கலைக்கப்பட இருப்பதால், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏற்கனவே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன.

    இதற்கிடையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    மேலும், நேற்று மாலை, சீன துணைப் பிரதமர் ஹெ லைஃபெங் உட்பட சில மூத்த சீன அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

    ஆனால், இஸ்லாமிய அரசு(IS) என்னும் தீவிரவாத குழு சமீபத்தில் JUI-F கட்சிக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இருப்பதால், இந்த தீவிரவாத குழுதான் இதற்கும் காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இஜ்கிய

    147 பள்ளி மாணவர்களை கொன்ற 2014 தீவிரவாத தாக்குதல் 

    கடந்த ஆண்டு, JUI-F கட்சியை சேர்ந்த மத அறிஞர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்லாமிய அரசு(IS) குழு ஒப்புக்கொண்டது.

    2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அதற்கு அண்டை நாடான பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    2014ஆம் ஆண்டுக்குப் பிறகு வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த நான்கு மோசமான தாக்குதல்களில் இந்த குண்டுவெடிப்பும் ஒன்றாகும்.

    2014ஆம் ஆண்டு பெஷாவரில் உள்ள பள்ளி ஒன்றில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 147 பேர், பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

    கடந்த ஜனவரி மாதம், பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலால் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    தீவிரவாதிகள்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை இந்தியா
    கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள் இந்தியா
    இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு இந்தியா
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  உலகம்

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    உலகம்

    புதிய சுற்றுப் பணிநீக்கத்தில், 276 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோஃசாப்ட்  மைக்ரோசாஃப்ட்
    இந்த காலகட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் இந்தியர்கள்  மத்திய அரசு
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? தாய்லாந்து
    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி அமெரிக்கா

    உலக செய்திகள்

    வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா ரஷ்யா
    'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்  கனடா
    பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல் இந்தியா
    தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025