NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி
    உறைந்த ஆற்றின் மேல் போட்டோ எடுக்க நடந்து சென்ற மூவர் பலி

    கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2022
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா. 49 வயதாகும் இவரது மனைவி ஹரிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நாராயணா முட்டனா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாண சந்தலர் என்னும் நகரில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் சுற்றுலா சென்றுள்ளார்கள்.

    இவர்களுடன் சேர்ந்து 3 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

    அங்கு கடும் பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் உறைந்திருந்தது.

    இதனையடுத்து மற்றவர்களை ஆற்றின் அருகில் விட்டுவிட்டு, நாராயணா, அவரது மனைவி ஹரிதா மற்றொரு இந்தியரான கோகுல் மெடிசெடி ஆகிய மூவரும் புகைப்படம் எடுக்கும் நோக்கில் உறைந்த ஆற்றின் மேல் நடக்க துவங்கியுள்ளனர்.

    ஆற்றில் ஏற்பட்ட வெடிப்பால் நீரில் மூழ்கி பலி

    புகைப்படம் எடுக்கும் நோக்கில் உறைந்த ஆற்றின் மேல் நடந்த சுற்றுலாவாசிகள்

    இந்நிலையில் திடீரென உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மேல் நடந்த மூவரும் ஆற்றின் உள்ளே விழுந்துள்ளனர்.

    அவர்களை மீட்க அருகில் இருந்த உறவினர்கள் அனைவரும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் பனியின் அடர்த்தி காரணமாக உள்ளே விழுந்த 3 பேரும் ஆற்றில் முழுகி உடனே இறந்துள்ளனர்.

    இதனையடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஹரிதாவின் உடலை சில மணி நேரத்திலேயே கண்டறிந்து மீட்டனர்.

    ஆனால், அவரது கணவர் நாராயணா முட்டனா மற்றும் கோகுல் என்பவரது உடல்கள் பல மணிநேர தேடுதலுக்கு பிறகே கண்டறிந்தனர்.

    இந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சுற்றுலாவிற்கு ஒன்றாக வந்த இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    இந்தியா

    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா-சீனா மோதல்
    பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும் பயனர் பாதுகாப்பு
    இந்தியாவின் அதிவேக சார்ஜிங் கொண்ட புதிய போன்; Infinix Zero Ultra புதுப்பிப்பு
    தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாரடைப்பு காரணமாக மரணம்-அதிர்ச்சியில் குடும்பத்தார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025