NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி
    உலகம்

    கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி

    கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி
    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2022, 12:11 pm 0 நிமிட வாசிப்பு
    கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி
    உறைந்த ஆற்றின் மேல் போட்டோ எடுக்க நடந்து சென்ற மூவர் பலி

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா. 49 வயதாகும் இவரது மனைவி ஹரிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா முட்டனா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாண சந்தலர் என்னும் நகரில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் சுற்றுலா சென்றுள்ளார்கள். இவர்களுடன் சேர்ந்து 3 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு கடும் பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் உறைந்திருந்தது. இதனையடுத்து மற்றவர்களை ஆற்றின் அருகில் விட்டுவிட்டு, நாராயணா, அவரது மனைவி ஹரிதா மற்றொரு இந்தியரான கோகுல் மெடிசெடி ஆகிய மூவரும் புகைப்படம் எடுக்கும் நோக்கில் உறைந்த ஆற்றின் மேல் நடக்க துவங்கியுள்ளனர்.

    புகைப்படம் எடுக்கும் நோக்கில் உறைந்த ஆற்றின் மேல் நடந்த சுற்றுலாவாசிகள்

    இந்நிலையில் திடீரென உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மேல் நடந்த மூவரும் ஆற்றின் உள்ளே விழுந்துள்ளனர். அவர்களை மீட்க அருகில் இருந்த உறவினர்கள் அனைவரும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் பனியின் அடர்த்தி காரணமாக உள்ளே விழுந்த 3 பேரும் ஆற்றில் முழுகி உடனே இறந்துள்ளனர். இதனையடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஹரிதாவின் உடலை சில மணி நேரத்திலேயே கண்டறிந்து மீட்டனர். ஆனால், அவரது கணவர் நாராயணா முட்டனா மற்றும் கோகுல் என்பவரது உடல்கள் பல மணிநேர தேடுதலுக்கு பிறகே கண்டறிந்தனர். இந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவிற்கு ஒன்றாக வந்த இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவான பிளேயிங் 11 இது தான் சென்னை சூப்பர் கிங்ஸ்
    'ஊம் சொல்றியா மாமா' முதல் 'ராவடி' வரை, ஐட்டம் டான்சரான முன்னணி நடிகைகள் தமிழ் திரைப்படங்கள்
    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    புதிதாக ஒரு ரிலேஷன்ஷிப்பில் இணைகிறீர்களா? உங்களுக்காகவே சில முக்கிய டிப்ஸ் உறவுகள்

    இந்தியா

    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஹூண்டாய்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு புதுச்சேரி
    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது

    அமெரிக்கா

    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது உலகம்
    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023