Page Loader
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி: பலத்த காயத்தினால் வெளியேறினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி: பலத்த காயத்தினால் வெளியேறினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

எழுதியவர் Sindhuja SM
Feb 17, 2024
08:41 pm

செய்தி முன்னோட்டம்

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியிடம் கவலை தெரிவித்தார். முதுகு பிடிப்புடன் போராடிய அவர், பேட்டிங்கின் போது பேட்டர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் 45 வது ஓவர் தொடங்குவதற்கு முன்பு வரை 104 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால், மீண்டும் டிரஸ்ஸிங் அறைக்கு திரும்ப முடிவு செய்தார். ஆனால், அவர் வெளியேறுவதற்கு முன், அவருக்கு அதிகமாக முதுகு வலி வந்ததால், அவர் தரையில் அமர்ந்து தன் முதுகு வலியுடன் போராடி கொண்டிருந்தார்.

இந்தியா

அற்புதமாக விளையாடிய ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில்

பிசியோ மருத்துவர் அவருக்கு இரண்டு முறை தற்காலிக சிகிச்சை அளித்த போதிலும், அவரால் அதற்கு மேல் விளையாட முடியவில்லை. ஆனால், அதற்கு முன் வரை அவரது விளையாட்டு சிறப்பாக இருந்தது. மூன்றாவது டெஸ்டில் மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியாவை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஜெய்ஸ்வால், அபாரமான சதத்துடன் இங்கிலாந்தின் முயற்சியை முறியடித்து இந்தியாவின் ரன்களை அதிகரித்தார். ஜெய்ஸ்வாலை(133 பந்துகளில் 104 ரன்கள்) தொடர்ந்து ஷுப்மான் கில்லும்(65 பேட்டிங், 120 பந்துகள்) இந்தியாவின் ரன்களை தக்க வைத்துக்கொள்ள உதவினார். இந்தியா 51 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. மொத்தமாக 322 ரன்களை எடுத்தது. 29 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் போனதால் இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.