NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்? பவுண்டரி கணக்கு விதிமுறை அமலுக்கு வருமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்? பவுண்டரி கணக்கு விதிமுறை அமலுக்கு வருமா?
    இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்?

    இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்? பவுண்டரி கணக்கு விதிமுறை அமலுக்கு வருமா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 19, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    2019 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியையும், அதன் சர்ச்சைகளையும் யாராலும் மறந்திருக்க முடியாது. இறுதி நிமிடம் வரை அத்தனை டிராமாக்களைக் கொண்டிருந்தது 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி.

    இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கு பெற்ற அந்தப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக ரன்களைக் குவித்திருக்க, வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

    சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சரிசமமான ரன்களைக் குவித்திருக்க, பவுண்டரி கணக்கு அடிப்படையில் இங்கிலாந்தை வெற்றியாளராக அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.

    இது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரிடத்திலுமே அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, பல்வேறு தளங்களில் சர்ச்சைகளையும் கிளப்பியது.

    ஒருநாள் உலகக்கோப்பை

    இன்று இரு அணிகளும் சரிசமமாக ரன்களைக் குவித்தால் என்னாகும்? 

    இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி வரும் நிலையில், இன்றும் இரு அணிகளும் சரிசமமாக ரன்களைக் குவித்தால் என்னவாகும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கிறது.

    2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர், பவுண்டரி அடிப்படையில் வெற்றியாளரை முடிவு செய்யும் விதியை ஐசிசி நீக்கி விட்டது.

    இன்று இரு அணிகளும் சரிசமமாக ரன்களைக் குவிக்கும் பட்சத்தில், ஒரு வெற்றியாளர் கிட்டும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர்களே நடத்தப்படவிருக்கிறது. எனவே, இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கவலையின்றி போட்டியின் கண்டுகளிக்கலாம்.

    கிரிக்கெட்

    இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டால்? 

    ஒரு வேளை இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டால், மீதமிருக்கும் போட்டியானது நாளை (நவம்பர் 20) விட்ட இடத்திலிருந்து தொடங்கி நடைபெறும். இதற்காகவே நவம்பர் 20-ஐ இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் நாளாக முன்பே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், இன்றைய போட்டியில் சிறிது நேரம் மட்டும் மழை குறுக்கிட்டு போட்டி நடைபெறும் பட்சத்தில், அதற்காகவே கூடுதலாக 120 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சூப்பர் ஓவர்களுக்காகவும் இந்த கூடுதல் நேரம் பயன்படுத்தப்படவிருக்கிறது.

    குறைந்தபட்சம் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களாவது இன்று விளையாடப்பட வேண்டும். அதற்கு சாத்தியமில்லாத பட்சத்தில் போட்டியானது ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    இந்தியா
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஒருநாள் உலகக்கோப்பை

    ODI World Cup Reserve Day : அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் நாள் குறித்த முழு விபரம் இந்திய கிரிக்கெட் அணி
    INDvsNZ Semifinal : போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் மைதானம்; எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா? இந்திய கிரிக்கெட் அணி
    INDvsNZ Semifinal : ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலியின் அபார செயல்திறன் விராட் கோலி
    INDvsNZ Semifinal போட்டிக்கு மழையால் ஆபத்தா? வானிலை அறிக்கை இதுதான் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    INDvsNZ Semifinal : சச்சினின் மூன்று சாதனைகளை முறியடிக்க தயாராகும் விராட் கோலி விராட் கோலி
    INDvsNZ Semifinal : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    சச்சின்- காம்ப்ளி நட்பு பற்றிய கிரிக்கெட் கதையை படமாக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் கௌதம் வாசுதேவ் மேனன்
    ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சிக்சர் அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா ஒருநாள் உலகக்கோப்பை

    இந்தியா

    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ
    தடையை மதிக்காமல் பட்டாசு போட்ட மக்கள்: மிகவும் மோசமடைந்தது டெல்லி காற்று மாசு டெல்லி
    செயற்கை மழைப்பொழிவை திட்டமிடும் டெல்லி அரசு; எப்படி சாத்தியம்?  டெல்லி
    இந்தியாவில் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க பரிசீலனை செய்து வரும் மத்திய அரசு டெஸ்லா

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா இந்தியா
    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் இந்தியா
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு ஹாக்கி போட்டி
    கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025