Loading...
சந்தேகமே வேண்டாம்! 2027 உலகக்கோப்பையில் கோலி ஆடுவது குறித்து பயிற்சியாளர் பளிச் பதில்
2027 உலகக்கோப்பையில் கோலி ஆடுவது குறித்து பயிற்சியாளர் பதில்

சந்தேகமே வேண்டாம்! 2027 உலகக்கோப்பையில் கோலி ஆடுவது குறித்து பயிற்சியாளர் பளிச் பதில்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2026
06:02 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து எழும் சந்தேகங்களை அவரது குழந்தைப்பருவப் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா முற்றிலும் நிராகரித்துள்ளார். களத்தில் விராட் கோலி வெளிப்படுத்தி வரும் அசாத்திய திறமை, உடற்தகுதி மற்றும் ரன் சேர்க்கும் பசி ஆகியவை அவர் இந்திய அணியின் ஒருநாள் திட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பதை உறுதிசெய்கின்றன என்றும், இதில் எந்தவித விவாதத்திற்கும் இடமில்லை என்றும் அவர் அழுத்தமாகக் கூறியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

கோலி பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிந்தைய கோலியின் சாதனை ரன்கள்

கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் அதிக ரன் குவித்த வீரராக விராட் கோலி விளங்குகிறார்.

அவர் விளையாடிய 12 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 76 சராசரியுடன் 760 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.

சிறுவயதிலிருந்தே கோலியின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நேரில் பார்த்த ராஜ்குமார் சர்மா, கோலி கிரிக்கெட்டிற்காகவே பிறந்தவர் என்றும், அவரது கடின உழைப்பும் சிறந்த உடற்தகுதியுமே அவரை இவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ

ரோஹித் ஷர்மா மற்றும் பிசிசிஐ அமைப்பின் நிலைப்பாடு

இதேபோல் 39 வயதான முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்தும் எழும் கேள்விகளுக்கு ராஜ்குமார் சர்மா பதிலளித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் 15 போட்டிகளில் 2 சதங்களுடன் 727 ரன்கள் குவித்து ரோஹித் சிறந்த மேட்ச் வின்னராகத் திகழ்கிறார்.

பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியாவும் ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், அவர் தேர்வாளர்களின் திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்த தேவையற்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாய்ப்பு

எதிர்காலத் தொடர்கள் மற்றும் உலகக்கோப்பைக்கான வாய்ப்பு

செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் கோலி மற்றும் ரோஹித் இருவருக்கும் தங்களது திறமையை மீண்டும் நிரூபிக்க சிறந்த வாய்ப்பாக அமையும்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரிலும், டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இந்தியா விளையாட உள்ளது.

இந்த தொடர்ச்சியான ஒருநாள் போட்டிகள் 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை வடிவமைப்பதில் இரு மூத்த வீரர்களுக்கும் மிக முக்கியப் பங்களிப்பை வழங்கும்.

ADVERTISEMENT