INDvsSL : கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இலங்கை வீரர்கள்; பின்னணி இதுதான்
வியாழக்கிழமை (நவம்பர் 2) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டியின் போது, புகழ்பெற்ற சியர்லீடரான மறைந்த பெர்சி அபேசேகரவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். 'அங்கிள் பெர்சி' என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் அபேசேகர, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டின் ஒரு அங்கமாக இருந்தார். மேலும் பார்வையாளர் மாடத்தில் இருந்து இலங்கை தேசியக் கொடியை கையில் ஏந்திக்கொண்டு வீரர்களை ஆதரிப்பதிலும், ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார். 1979 ஒருநாள் உலகக்கோப்பை முதல், இலங்கை அணியின் சியர்லீடராக வலம் வந்த அவர் சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.