NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports Round Up : துப்பாக்கிச் சுடுதலில் தங்கங்களை வாரிக்குவித்த இந்தியா; ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி; முக்கிய விளையாட்டு செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports Round Up : துப்பாக்கிச் சுடுதலில் தங்கங்களை வாரிக்குவித்த இந்தியா; ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி; முக்கிய விளையாட்டு செய்திகள்
    முக்கிய விளையாட்டு செய்திகள்

    Sports Round Up : துப்பாக்கிச் சுடுதலில் தங்கங்களை வாரிக்குவித்த இந்தியா; ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி; முக்கிய விளையாட்டு செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 28, 2023
    08:21 am

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 27) இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை வாரிக் குவித்துள்ளது.

    துப்பாக்கிச் சுடுதல் 50 மீ 3பி போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா தங்கமும், ஆஷி சௌக்சே வெண்கலமும் வென்றனர்.

    25 மீ பிஸ்டல் அணி பிரிவில் இந்தியா தங்கமும், 50 மீ 3பி அணி பிரிவில் வெள்ளியும் வென்றது. 25 மீ பிஸ்டல் தனிநபர் பிரிவில் இஷா சிங் வெள்ளி, ஸ்கீட் அணி பிரிவில் வெண்கலம் மற்றும் பாய்மர படகு டிங்கி ஐஎல்சிஏ-7 தனிநபர் போட்டியில் விஷ்ணு சரவணன் வெண்கலமும் வென்றனர்.

    மேலும், ஸ்கீட் தனிநபர் பிரிவில் அனந்த் ஜீத் சிங் வெள்ளி வென்றார்.

    Nepal players shattered yuvraj rohit records in t20i

    டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள வீரர்கள்

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை நடந்த ஆடவர் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் மங்கோலியாவை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் 314 ரன்களை எடுத்த நேபாளம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் அடித்த முதல் அணி என்ற சாதனை படைத்துள்ளது.

    மேலும் மங்கோலியாவை 273 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக மாறியுள்ளது.

    இதற்கிடையே டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் என்ற சாதனையை வைத்திருந்த யுவராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி நேபாள வீரர் தீபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

    மேலும், குஷால் மல்லா 34 பந்துகளில் 100 ரன்கள் எட்டி, அதிவேக சதம் அடித்த ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    India women's hockey beats singapore in asian games

    மகளிர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை நடந்த மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிங்கப்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    போட்டியின் முதல் பாதி முடிவில் இந்திய ஹாக்கி அணி 8 கோல்கள் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், சிங்கப்பூர் கோல் எதுவும் அடிக்காமல் மிகவும் பின்தங்கியது.

    மேலும், இரண்டாம் பாதியில் சிங்கப்பூர் அணி தற்காப்பு ஆட்டத்தை ஆடினாலும், அதை முறியடித்து இந்தியா மேலும் 5 கோல்களை அடித்தது.

    சிங்கப்பூர் மகளிர் ஹாக்கி அணி கடைசி வரை கோல் எதுவும் அடிக்காத நிலையில், இந்தியா இறுதியில் 13-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    shubman gill sooner to reach 1st spot in odi ranking

    ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்

    புதன்கிழமை ஐசிசி வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், பாபர் அசாம் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    ஷுப்மன் கில் கடந்த வாரம் 814 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றிய நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 847 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளார்.

    முதலிடத்தில் உள்ள பாபர் அசாம் 857 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், ஷுப்மன் கில் அவரை நெருங்கியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பங்கேற்று சிறப்பாக ஆகியிருந்தால், அவர் முதலிடத்தை கைப்பற்றி இருப்பார்.

    ஆனால், அது நடக்காத நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    INDvsAUS 3rd ODI India lost by 66 runs

    INDvsAUS 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம், மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    கிரிக்கெட்
    துப்பாக்கிச் சுடுதல்

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி குத்துச்சண்டை
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைக்கு தயாராகும் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி கால்பந்து
    Sports Round Up : டேவிஸ் கோப்பையிலிருந்து போபண்ணா ஓய்வு; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள் டேவிஸ் கோப்பை
    2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் காணும் 4 இந்திய தாய்மார்கள் இந்தியா

    கிரிக்கெட்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமனம் என தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் மனம் உடைந்த சஞ்சு சாம்சன்? ரசிகர்கள் நெகிழ்ச்சி இந்திய கிரிக்கெட் அணி
    2025 ஆசிய கோப்பை மீண்டும் டி20 வடிவத்தில் நடத்தப்படும் என அறிவிப்பு ஆசிய கோப்பை
    ஒரு தவறை சரிசெய்ய மற்றொரு தவறு; இந்திய அணியை விளாசிய ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட் அணி

    துப்பாக்கிச் சுடுதல்

    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை
    துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி! சென்னை
    ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்! இந்தியா
    உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025