
லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் : அடுத்த 3 மாதம் ரெஸ்ட்
செய்தி முன்னோட்டம்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் நிலையில், லண்டனில் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
ஷ்ரேயாஸ் ஐயரின் முதுகு அறுவை சிகிச்சை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) லண்டனில் நடந்தது.
இதனால் ஜூன் மாதத்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடக்க உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் முழு உடற்தகுதியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
shreyas iyer may come on odi wordcup
ஷ்ரேயாஸ் ஐயரின் காயத்தின் பின்னணி
கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் ஆவார்.
சமீபத்தில் முதுகுப் பிரச்சினையில் இருந்து மீண்டு, அவரது முதுகில் காயம் ஏற்படுவதற்கு முன்பு பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 இல் மீண்டும் திரும்பினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் போது மீண்டும் வலி அதிகமானதால் பாதியிலேயே வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அடுத்த மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும்.
இந்திய அணியில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்லாது பும்ரா மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்ட பல வீரர்களும் விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.