Page Loader
INDvsENG முதல் டெஸ்ட்: 15 ஆண்டுகளில் முதல்முறை; டக்கவுட் ஆகி வரலாறு படைத்த சாய் சுதர்சன்
டக்கவுட் ஆகி வரலாறு படைத்த சாய் சுதர்சன்

INDvsENG முதல் டெஸ்ட்: 15 ஆண்டுகளில் முதல்முறை; டக்கவுட் ஆகி வரலாறு படைத்த சாய் சுதர்சன்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2025
07:31 pm

செய்தி முன்னோட்டம்

ஹெடிங்லியில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் 23 வயதான சாய் சுதர்சன் தனது அறிமுக இன்னிங்ஸிலேயே டக்-அவுட் ஆனார்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தொடக்கம் ஏமாற்றத்தில் முடிந்தது. மேலும், இதன் மூலம், அவர் 15 ஆண்டுகளில் அறிமுக டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன முதல் இந்திய வீரர் ஆனார்.

கடைசியாக 2010-ல் நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரித்திமான் சஹா டக்கவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த பேட்டரான சாய் சுதர்சன் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்ததால், விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டார்.

மூன்றாவது இடம்

மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன்

மதிய உணவுக்கு சற்று முன்பு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு சாய் சுதர்சன் மூன்றாவது இடத்தில் களமிறங்கினார்.

இருப்பினும், சுதர்சன் தொடக்கத்திலிருந்தே சங்கடமாகத் தெரிந்தார். அவர் தனது முதல் பந்திலேயே கிட்டத்தட்ட அவுட் ஆக வேண்டிய சூழலில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

அடுத்த ஓவரில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை தவறான நேரத்தில் ஃபிளிக் செய்ததால் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மிதிடம் கேட்ச் கொடுத்து, ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

இதன் மூலம் மனோகர் ஹர்திகர், குண்டப்பா விஸ்வநாத், தேவாங் காந்தி மற்றும் கிறிஸ் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அறிமுகப் போட்டியிலேயே டக்கவுட் ஆன இந்திய பேட்ஸ்மேன்களின் அரிய பட்டியலில் இப்போது அவர் இணைந்துள்ளார்.