
வரலாற்றில் முதல் முறை; சமூக வலைதளங்களில் 1 பில்லியன் ஃபாலோயர்கள் பெற்று ரொனால்டோ சாதனை
செய்தி முன்னோட்டம்
பிரபல போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
அவர் சமீபத்தில் தனது 900வது தொழில்முறை கால்பந்து கோலை அடித்த ஒரு வாரத்தில் இந்த சாதனை வந்துள்ளது.
ரொனால்டோவின் குறிப்பிடத்தக்க உலகளாவிய செல்வாக்கு அவரது பெரிய சமூக ஊடகப் பின்தொடர்தலில் தெளிவாகத் தெரிகிறது.
ரொனால்டோவின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பல தளங்களில் பரவியுள்ளது. அவர் இன்ஸ்டாகிராமில் 638 மில்லியன் பின்தொடர்பவர்களையும், 60.6 மில்லியன் யூடியூப் சந்தாதாரர்களையும், எக்ஸ் தளத்தில் 113 மில்லியன் பின்தொடர்பவர்களையும், முகநூலில் 170 மில்லியன் பின்தொடர்பவர்களையும், மேலும் சீன தளங்களானகுவாய்ஷோ மற்றும் வெய்போவில் மில்லியன் கணக்கானவர்களையும் கொண்டுள்ளார்.
நன்றி
பின்தொடர்பவர்களுக்கு எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்த ரொனால்டோ
யூ.ஆர்.கிறிஸ்டியானோ என்ற தனது சேனலுடன் யூடியூப்பில் அவர் மேற்கொண்ட சமீபத்திய முயற்சி, ஒரு வாரத்திற்குள் 50 மில்லியன் சந்தாதாரர்களை விரைவாகப் பெற்றது.
தற்போது சவூதி அரேபியாவில் அல்-நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, எக்ஸ் தளத்தில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
அந்த பதிவில், "நாம் வரலாற்றை உருவாக்கிவிட்டோம் - 1 பில்லியன் பின்தொடர்பவர்கள்! இது ஒரு எண்ணிக்கையை விட அதிகம் - இது விளையாட்டு மற்றும் அதற்கு அப்பால் நமது பகிரப்பட்ட ஆர்வம், உந்துதல் மற்றும் அன்பிற்கு ஒரு சான்றாகும்." என்று கூறியுள்ளார்.
மேலும், மடீராவின் தெருக்களில் இருந்து உலகின் மிகப்பெரிய மேடைகள் வரை தனது பயணம் முழுவதும் அளித்து வரும் ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் எக்ஸ் பதிவு
We’ve made history — 1 BILLION followers! This is more than just a number - it’s a testament to our shared passion, drive, and love for the game and beyond.
— Cristiano Ronaldo (@Cristiano) September 12, 2024
From the streets of Madeira to the biggest stages in the world, I’ve always played for my family and for you, and now 1… pic.twitter.com/kZKo803rJo