காமன்வெல்த் 2026 பளுதூக்குதலில் வெள்ளி வென்றார் ரிஷிகாந்த சிங்: 121 கிலோ தூக்கி புதிய சாதனை!
செய்தி முன்னோட்டம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் ஆண்களுக்கான 60 கிலோ எடையுள்ள பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் சனம்பம் ரிஷிகந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். மலேசியாவின் முகமது அனிக் பின் கஸ்தான் தங்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 121 கிலோ எடையை உயர்த்தி இருவரும் புதிய காமன்வெல்த் சாதனையை அமைத்தனர். ஆனால் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் கஸ்தான் 152 கிலோ உயர்த்தி புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். ரிஷிகந்தா கிளீன் அண்ட் ஜெர்க்கில் 143 கிலோ உயர்த்தி, மொத்தம் 264 கிலோ எடையுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
தொடர் சாதனைகள்
ரிஷிகாந்த சிங்கின் விளையாட்டுப் பயணம்
ஸ்னாட்ச் பிரிவில் ரிஷிகாந்த சிங் 121 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை படைத்தார். இவருக்கு இணையாக மலேசியாவின் முகமது அனிக்பின் காஸ்டானும் 121 கிலோ எடையை தூக்கி சாதனையை சமன் செய்தார்.
கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் ரிஷிகாந்த சிங் 143 கிலோ எடையைத் தூக்கினார். ஆனால் மலேசிய வீரர் காஸ்டான் 152 கிலோ தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை நிறுவியதால், ஒட்டுமொத்தமாக 264 கிலோ தூக்கிய ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்திய ராணுவ விளையாட்டு அமைப்பின் மூலம் பயிற்சி பெற்ற ரிஷிகாந்த சிங், அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் எடைதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 271 கிலோ தூக்கித் தங்கம் வென்று தேசிய சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.