NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல்

    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 29, 2024
    01:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகும் நிலையில், ஏலத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னாவுடன் நடத்திய விவாதத்தில், வீரர்கள் தக்கவைப்பது குறித்து பேசினார்.

    அதில், ஐபிஎல் 2025க்கான வீரர்கள் தக்கவைத்து விதிகளை வெளியிடுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது எனத் தெரிவித்த அஸ்வின், 4 வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறினார்.

    மேலும் 2 RTM வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இந்த தக்கவைப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு, அன்கேப்ட் வீரர் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறினார்.

    புதிய முயற்சி

    வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிப்பதை தடுக்க புதிய முயற்சி

    வீரர்கள் தக்கவைப்பதில் எந்த கட்டுப்பாடும் வழங்கப்படாது என அவர் கூறிய நிலையில், வெளிநாட்டு வீரர்கள் குறித்த அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

    அதாவது, ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு, வெளிநாட்டு வீரர்கள் போட்டியின்போது விளையாடாமல் புறக்கணிப்பதை தடுக்கவும் ஐபிஎல் நிர்வாகம் விதிகளை கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    தனது சேனலில் ஐபிஎல் குறித்த தகவல் தவிர, ஜெய் ஷா ஐசிசி தலைவரானது, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்பான பல்வேறு தகவல்களையும் விவாதித்தார்.

    இதற்கிடையே, அஸ்வின் கூறியபடி ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்கள் தக்கவைப்பு விதிகள் அமலானால் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்தவித சிக்கலும் இல்லாமல் இந்த சீசனில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    அஸ்வின் ரவிச்சந்திரன்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல் ஐபிஎல் 2024
    RR vs RCB : விராட் கோலி சதமடித்து சாதனை விராட் கோலி
    ஐபிஎல் 2024: ஒரு வழியாக, முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024
    ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த புதிய வேக பந்து வீச்சாளர் டெல்லி கேப்பிடல்ஸ்

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேற்றம் பந்துவீச்சு தரவரிசை
    சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்கள் : புதிய சாதனை படைப்பாரா அஸ்வின்? கிரிக்கெட்
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் : கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்
    ட்விட்டரில் ஒரு சின்ன சந்தேகம் : நேரடியாக எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வியெழுப்பிய அஸ்வின் விளையாட்டு

    கிரிக்கெட்

    கோலாகலமாக துவங்குகிறது TNPL சீசன் 8: எங்கே பார்க்கலாம்? டிஎன்பிஎல்
    வாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம் மகாராஷ்டிரா
    முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ பிசிசிஐ
    EV ஸ்டார்ட்அப் BluSmart நிறுவனத்தில் முதலீடு செய்த 'தல' எம்.எஸ். தோனி ஸ்டார்ட்அப்

    கிரிக்கெட் செய்திகள்

    டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா  டி20 உலகக்கோப்பை
    பெண்கள் டெஸ்ட்: SAக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள் மகளிர் கிரிக்கெட்
    இந்திய அணி இன்று பார்படாஸில் இருந்து புறப்படுகிறது! நாளை இரவு டெல்லியில் தரையிறங்கும் எனத்தகவல் இந்திய அணி
    பார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025