Page Loader
விசாகப்பட்டினத்தில் சொந்தமாக பேட்மிண்டன் அகாடமி திறக்கும் PV சிந்து! 
அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது

விசாகப்பட்டினத்தில் சொந்தமாக பேட்மிண்டன் அகாடமி திறக்கும் PV சிந்து! 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 07, 2024
07:35 pm

செய்தி முன்னோட்டம்

பி.வி.சிந்து சொந்தமாக ஒரு பேட்மிண்டன் மற்றும் விளையாட்டு சிறப்பு மையம் கட்டவுள்ளார். அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று, நவம்பர் 07 நடைபெற்றது. கடந்த 2021 ஜூன் மாதம் அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் பி.வி. சிந்துவிற்காக விசாகப்பட்டினத்தில் 2 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியது. அந்த நிலத்தில், விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட பிரத்யேக வசதியை நிறுவுவதற்காக ஒரு அகாடமியை கட்டவுள்ளார் சிந்து. "இந்த மைல்கல்லை எட்டுவதற்கு மாநில அரசின் ஆதரவு முக்கியமானது, இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களின் விருப்பங்களை வென்றெடுக்கும் வசதிக்கான எனது கனவை நனவாக்க உதவியது" என்று சிந்து கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post